அரசாங்க ஊழியர்கள் வெளிநாடு செல்ல அரிய வாய்ப்பு -வெளியானது அறிவிப்பு
வெளிநாடு செல்ல அரச ஊழியர்களுக்கு வாய்ப்பு
வேலை அல்லது வேறு எந்த நோக்கத்திற்காகவும் வெளிநாடு செல்ல விரும்பும் அரச உத்தியோகத்தர்களுக்கு ஐந்தாண்டு கால சம்பளமில்லாத விடுமுறை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் தினேஷ் குணவர்தன நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பு ஆங்கில ஊடகமொன்றிடம் தெரிவித்தார்.
அமைச்சர் குணவர்தனவின் கூற்றுப்படி, அரச ஊழியர்கள் ஐந்தாண்டுகளின் முடிவில் சம்பளம் இல்லாத விடுமுறை காலத்தை பூர்த்தி செய்ததன் பின்னர் சகல சலுகைகளுடனும் அவர்களின் மூப்பு மற்றும் தரங்களை பெற்றுக்கொள்ளலாம் என்று குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.
கிடைக்கவுள்ள நன்மைகள்
இதன் மூலம் அரசு ஊழியர்கள் வெளிநாட்டிற்கு வேலை வாய்ப்புக்காக செல்வதற்கு ஊக்கம் கிடைக்கும். எனவே, இத்திட்டம் அரச ஊழியர்களுக்கு பல நன்மைகளை வழங்கும் என அமைச்சர் தெரிவித்தார்.
