தாயும்,மகளும் நடத்திவந்த விபசார விடுதி முற்றுகை!
Sri Lanka Police
Colombo
Sri Lanka Police Investigation
By Jaso
ஹந்தான பிரதேசத்தில் உள்ள பெரிய வீடொன்றில் தாயும் மகளும் நடத்தி வந்த விபசார விடுதியை சுற்றிவளைத்த நிலையில் சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டதாக கண்டி குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
மகள் விபசார மையத்தின் மேலாளராகவும், தாய் காசாளராகவும் பணிபுரிந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த விபச்சார விடுதி தொடர்பில் இரண்டு வாரங்களாக விசாரணைகளில் காவல்துறையினர் ஈடுபட்டு வந்தனர்.
5000 ரூபாவிற்கு ஒருவரை விபசாரத்திற்காக
இதன்போது 5000 ரூபாவிற்கு ஒருவரை விபசாரத்திற்காக கொள்வனவு செய்த போதே சந்தேகநபர்களை கைது செய்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இது தொடர்பாக காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்