பறிபோகுமா அர்ச்சுனாவின் எம்.பி பதவி: பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் (Ramanathan Archchuna) பதவியை வலுவற்றதாக்கி உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில் நீதிமன்றம் உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.
இதன்படி, குறித்த மனுவை உறுதி செய்ய ஜூன் மாதம் 26 ஆம் திகதி அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த மனு இன்று (14) நீதியரசர்களான மாயாதுன்னே கொரயா மற்றும் மஹேன் கோபல்லவ ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அரசியலமைப்பு
இதன்போது குறித்த மனுவின் சமர்ப்பணங்களை உறுதிப்படுத்த, அதனை எதிர்வரும் ஜூன் மாதம் 26 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்குமாறு நீதியரசர்கள் அமர்வு உத்தரவிட்டது.
2024 பொதுத் தேர்தலில் அரச மருத்துவ அதிகாரியாக அர்ச்சுனா பதவி விலகாமல் தேர்தலில் போட்டியிட்டதாகவும், இது அரசியலமைப்புச் சட்டத்தின் 91(1)(e) பிரிவை மீறுவதாகவும் தெரிவிக்கப்பட்டு சமூக செயற்பாட்டாளர் ஓஷலா ஹெராத்தால் என்பவரால் அர்சுனாவிற்கு எதிராக இந்த மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்தநிலையில், மனுவை உறுதி செய்ய ஜூன் மாதம் 26 ஆம் திகதி அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
🛑 you may like this...!
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
