ஈரானின் ஏவுகணை தாக்குதலில் இரண்டாக பிளவடைந்த அமெரிக்க விமானம்
சவுதி அரேபியாவில் உள்ள ஒரு விமானத் தளத்தில், அமெரிக்காவின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு விமானம் ஒன்று அழிக்கப்பட்டிருப்பதை சரிபார்க்கப்பட்ட படங்கள் காட்டுவதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க இராணுவச் செய்திகளை வெளியிடும் ஒரு முகநூல் பக்கம் இந்தப் படங்களை முதலில் பகிர்ந்ததாகத் தெரிகிறது. E-3 சென்ட்ரி விமானம் இரண்டாகப் பிளவுபட்டிருப்பதை அவை காட்டுகின்றன.
பிரின்ஸ் சுல்தான் விமானத் தளத்தின் மீது தாக்குதல்
சவுதி தலைநகர் ரியாத்திலிருந்து சுமார் 100 கி.மீ (62 மைல்கள்) தென்கிழக்கில் உள்ள பிரின்ஸ் சுல்தான் விமானத் தளத்தில் இந்தப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டன.

image -bbc
படங்களில் காணப்படும் தூண்கள், சேமிப்பு அலகுகள் மற்றும் நடைபாதைப் பகுதிகளில் உள்ள குறியீடுகள் உள்ளிட்ட அம்சங்கள், செயற்கைக்கோள் படங்களுடன் பொருந்துகின்றன.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று, விமானத் தளத்தின் மீதான ஈரானிய ஏவுகணைத் தாக்குதலில் 12 அமெரிக்கப் பணியாளர்கள் காயமடைந்ததாகவும், அவர்களில் இருவர் படுகாயமடைந்ததாகவும் ஒரு அமெரிக்க அதிகாரி ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்திருந்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
2 நாட்கள் முன்