2024 ஜனாதிபதித் தேர்தல்: பட்டாசுகளுக்கு அதிகரிக்கும் கேள்வி
Sri Lankan Peoples
Sri Lanka Presidential Election 2024
By Dhilak
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலைக் கருத்தில் கொண்டு பட்டாசுகளுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் தினேஷ் பெர்னாண்டோ இதனை குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் பேரணிகள் மற்றும் நிகழ்வுகளுக்கு பயன்படுத்தப்படும் பெரிய அளவிலான பட்டாசுகள் (மால் வெடி) உற்பத்திக்கு அதிக தேவை உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தயாரிப்பு பணிகள்
தேர்தலுக்கு அடுத்த நாட்களில் பட்டாசு தேவை அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

பட்டாசு உற்பத்தி நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான மூலப்பொருட்களை குறைந்த விலையில் பெற்றுக் கொண்டதால், தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பட்டாசு தயாரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
4 நாட்கள் முன்
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்...
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி