நான் யாரையும் நம்பமாட்டேன்! எனக்கு வீடு கூட இல்லை - கவலையில் சீமான்
எனக்கு வீடே கிடையாது என்றும் யாரையும் தான் நம்ப மாட்டேன் எனவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
கடலூரில் நாம் தமிழர் நிர்வாகியான மறைந்த கடல்தீபன் பட திறப்பு விழா மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சி விழாவில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் (Seeman) கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து பேசுகையில்,
நாட்டையே ஆள துடிக்கிற எனக்கு வாழ்வதற்கு வீடு இல்லை என்பது வரலாற்றில் எவ்வளவு பெரிய துயரம் .உண்மையிலே எனக்கு வீடு இல்லை நம்ப மறுக்கிறாங்க. அடுத்த மாதம் வீட்டை காலி பண்ணனும், என் மனைவி, பிள்ளைகளை கூட்டிக்கிட்டு எங்கே போறது?
நானும் என் மனைவியும் ஒரு சின்ன குடும்பம் நாங்க பாட்டுக்கு ஒரு சின்ன குடிசையில் எங்கேயாவது இருந்திட்டு போவோம்.
ஆனா என் பிள்ளைகள், அந்த வாத்து, கோழிகள், புறா இதை எங்க கொண்டு போய் போடறது? எந்த வீட்டில் கொண்டு போய் வச்சாலும் வீடு தரமாட்டான். உங்களுக்கு தெரியுமா?
கருணாநிதி ஆட்சி காலத்தில் இந்த மண்ணில் நான் போராடுகிற காலத்தில் இருந்து எந்த விடுதியிலும் எனக்கு தங்க இடம் கொடுக்க மாட்டாங்க.
இப்போ எனக்கு வாழறதுக்கு வீடு இல்லை என்றார்.