ஐஸ் போதைப் பொருளுடன் சிக்கிய இளைஞன் - விசாரணையில் வெளிவந்த திருப்பம்
Tamils
Vavuniya
Sri Lanka Police Investigation
By Dharu
வவுனியாவில் ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (11) பிற்பகல் மதவாச்சி பகுதியில் 28 வயதுடைய குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மதவாச்சி பகுதியில் நேற்று ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
நீதிமன்றில் முன்னிலை
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர் இன்றையதினம் காவல்துறை மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த இளைஞனிடமிருந்து 6 கிராம் 500 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனை விற்பனைக்காக வைத்திருந்த குற்றச்சாட்டில் மதவாச்சி பகுதியை சேர்ந்த குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளின் பின் குறித்த நபரை நீதிமன்றில் முன்னிலை படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்