உடனடியாக வெளியேறுங்கள் : ஈரான் மக்களுக்கு இஸ்ரேல் இராணுவத்தின் அறிவிப்பால் கடும் பதற்றம்
ஈரானில் தாக்குதல் இலக்குகளுக்கு அருகில் வசிப்பவர்கள் அந்த பகுதியிலிருந்து உடனடியாக வெளியேற வேண்டுமென இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.
பாரசீக மொழியில் வெளியேற்ற அறிவிப்புகளை அனுப்பத் தொடங்கியுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது..
பாதுகாப்பிற்காக வெளியேறுங்கள்
ஈரானின் அணுசக்தி திட்டங்களுடன் தொடர்பிலுள்ள இலக்குகள் தாக்கப்படும் எனவும் எனவே உங்களின் சொந்த பாதுகாப்பிற்காக அவ்விடங்களை விட்டு வெளியேறுமாறும் இஸ்ரேல் இராணுவம் கோரிக்கை விடுத்துள்ளது.
X பதிவில் வெளியிட்ட இடுகையில், தெஹ்ரானில் வசிப்பவர்களுக்கு பின்வரும் செய்தியை அனுப்புவதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. அதன்படி, "நாட்டின் ஆயுத உற்பத்தி வசதிகள் அல்லது அதற்கு அருகில் வசிப்பவர்கள் உடனடியாக அந்த பகுதிகளை விட்டு வெளியேறி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவலை அளிக்க வேண்டும்."என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடும் தொனியிலான இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரின் அறிக்கை
ஈரானிய சர்வாதிகாரி தெஹ்ரானை பெய்ரூட்டாகவும், தெஹ்ரானில் வசிப்பவர்களை தனது ஆட்சியின் பிழைப்புக்காக பணயக்கைதிகளாக மாற்றுகிறார்" என்று இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தெஹ்ரானில் குடியிருப்பாளர்களை வெளியேற்றுவதற்கான கட்ஸின் உத்தரவு, மக்கள் தொகையை வெளியேற்றுவதன் மூலம் தெஹ்ரான் மீது அழுத்தம் கொடுக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகும் என்று ஒரு பாதுகாப்பு வட்டாரம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
