கடல் வழியாக வெளிநாடு செல்ல முற்பட்டவர்கள் யாழில் மடக்கி பிடிப்பு (படங்கள்)
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பகுதியில் இருந்து வெளிநாடு செல்ல முற்பட்ட 17 பேர் இன்றைய தினம் திங்கட்கிழமை பருத்தித்துறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 15 பேர் சிலாபம் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், இருவர் கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்தவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் குழுவொன்று நடமாடுவதாக பருத்தித்துறை காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர்.
ஆரம்பகட்ட விசாரணை
கைது செய்யப்பட்டவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் அவர்கள் சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக வெளிநாடொன்றுக்கு செல்ல முற்பட்டதாக தெரியவந்துள்ளது.
அதனை அடுத்து அவர்களை காவல் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.





