புலனாய்வு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு
அரச பாதுகாப்பு, பயங்கரவாதம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான காவல்துறையின் விசேட பிரிவின் புலனாய்வு அதிகாரிகள், இனிவரும் காலங்களில் மூடி வெட்டி, தாடியை சவரம் செய்து, முறையான ஆடைகளை அணிந்து கடமைகளுக்கு சமூகமளிக்க வேண்டும் என அந்த பிரிவிற்கு பொறுப்பான பிரதி காவல்துறை மாஅதிபர், அனைத்து காவல்துறை நிலையங்களுக்கும் அறிவித்துள்ளார்.
அனைத்து காவல்துறை நிலையங்களிலும் காவல்துறை விசேட புலனாய்வு பிரிவுகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன், அந்த பிரிவின் அதிகாரிகள் புலனாய்வு தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக மாறு வேடங்களில் கடமைகளை செய்ய வேண்டியுள்ளதை கருத்திற்கொண்டே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
புலனாய்வு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளை போன்று கடமைகளில் ஈடுபடுவதில்லை.
இந்த நிலையில், புதிய அறிவிப்புக்கு அமைய, மூடி வெட்டி, தாடியை சவரம் செய்து, இனிவரும் காலங்களில் குறித்த அதிகாரிகள் கடமைகளில் ஈடுபட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.