பேருந்து பயணிகளுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவித்தல்
நிர்ணயிக்கப்பட்ட பேருந்து கட்டணத்தை விட அதிகளவில் கட்டணத்தை வசூலிக்கும் பேருந்து நடத்துநர்கள் தொடர்பில் உடனடியாக அறிவிக்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிராண்டோ தெரிவித்துள்ளார்.
பேருந்து கட்டண திருத்தத்திற்கு பின்னர் அதிக கட்டணம் வசூலிப்படுவதாக பல முறைப்பாடுகள் வந்துள்ளன என்றும் அது தொடர்பில் எழுந்துள்ள பிரச்சனைகளை தீர்க்கவே குறித்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொலைபேசி இலக்கம்
நிர்ணயிக்கப்பட்ட பேருந்து கட்டணத்தை விட அதிகளவில் பேருந்து கட்டணம் அறவிடப்படுமானால் உடனடியாக 1955 என்ற எண்ணுக்கு அழைக்கவும் என்றும் கேட்டுக்கொண்டார்.
தொலைபேசியில் வரும் முறைப்பாடுகளுக்கு உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
பேருந்து கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்வதற்காக நாடு முழுவதும் நடமாடும் பரிசோதகர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

