சிறுவர்கள் தொடர்பில் வெளியான தகவல் -பெற்றோரே அவதானம்
சிறுவர்களுக்கு கொவிட்
கொவிட் தொற்றுகாரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம், கொவிட் தொற்றுக்கு இலக்காகி சிகிச்சை பெற்ற குழந்தைகளின் எண்ணிக்கை 3 ஆக இருந்தது. ஆனால் ஜூலை மாதத்திற்குள் அந்த எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது.
12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொவிட் தடுப்பூசி போடப்படவில்லை. எனவே அவர்கள் மீது மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என கொழும்பு லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் டொக்டர் கோசல கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
அச்சுறுத்தும் டெங்கு
அத்துடன் டெங்கு காய்ச்சலும் வேகமாக பரவி வருகிறது.
எனவே சுகாதார வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றுவது மிகவும் முக்கியம்.
இவ்வாறான நோய்களில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கு பிள்ளைகளுக்கு அறிவுறுத்தப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டார்.