தொழிலாளர்களின் சம்பள விவகாரம்: நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விவகாரம் தொடர்பிலான வழக்கின் தீர்ப்பு உயர்நீதிமன்றத்தால் சற்றுமுன்னர் வழங்கப்பட்டுள்ளது.
தோட்டத்தொழிலாளர்களுக்கு எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் நாளொன்றுக்கு 1,700 ரூபா சம்பளம் வழங்குமாறு உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பளத்தை 1,700 ரூபாவாக அதிகரித்து வழங்குமாறு அரசாங்கத்தால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது.
1700 ரூபா சம்பளம்
அந்த தொகையை வழங்கமுடியாது எனத் தெரிவித்துள்ள சில தோட்ட கம்பனிகள், அந்த வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தது.
குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே தொழிலாளர்களுக்கு எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் நாளொன்றுக்கு 1,700 ரூபாய் சம்பளம் வழங்குமாறு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
![](https://cdn.ibcstack.com/bucket/63039cb22bd37.webp)
![இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….](https://cdn.ibcstack.com/article/528b1858-c217-44bd-aa75-8d6f4258fc70/24-666c04ec6747a-sm.webp)