தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை தொடர்பில் அரசாங்கம் வெளியிட்ட தகவல்
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பது அரசாங்கத்திற்கு ஒரு சவாலாக மாறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தோட்டத் தொழில்கள் அமைச்சு மற்றும் நிதி அமைச்சு இது தொடர்பாக தொடர்ந்து தலையீடுகளை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நானுஓயா தொடருந்து நிலையத்தின் கண்காணிப்பு சுற்றுப்பயணத்திற்குப் பிறகு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அமைச்சர் பிமல் ரத்நாயக்க இந்தக் கருத்துக்களை குறிப்பிட்டுள்ளார்.
பிரச்சினைக்கு தீர்வு
இருப்பினும், வாக்குறுதியளிக்கப்பட்டபடி தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் நிச்சயமாக அதிகரிக்கப்படும் என்றும், தோட்டத் தொழிலாளர்கள் தற்போது பெறும் சம்பளம் போதுமானதாக இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், அடுத்த சில மாதங்களில் இந்தப் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்று தான் நம்புவதாகவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
