தனியார் துறையில் 4 இலட்சம் வேலைவாய்ப்புக்கள் - வெளிநாட்டு ஊழியர்கள் நியமனம்: அரச தரப்பு அறிவிப்பு
நாட்டில் தொழிலாளர்களின் பற்றாக்குறை காரணமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்த வேண்டிய காட்டாயம் ஏற்பட்டுள்ளது என்று கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அமைச்சர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்துள்ளார்.
அத்துடன் தற்போது தனியார் துறையில் 4 இலட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புக்கள் காலியாக காணப்படுகின்றன என்றும் அமைச்சர் சுனில் ஹந்துநெத்தி குறிப்பிட்டுள்ளார்.
கைத்தொழில் மற்றும் தொழில் முனைவோர் அபிவிருத்தி அமைச்சில் நடைபெற்ற விசேட கலந்து ரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொழிலளர்களின் பற்றாக்குறை
அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது நாட்டில் உள்நாட்டு தொழில்துறைத் துறைகளான கட்டுமானம், ஓடுகள் மற்றும் உதிரிப்பாகங்கள் உற்பத்தி, மோட்டார் வாகன உதிரிப்பாகங்கள் உற்பத்தி, காலணிகள் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 4 இலட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் காலியாக உள்ளன.

உள்நாட்டில் நிலவும் திறன்மிக்க மற்றும் தினற்ற தொழிலளர்களின் பற்றாக்குறை காரணமாகவும், பொருளாதாரத்தை நிலைநாட்டவும் இந்த காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் ஊழியர்களை அமர்த்த வேண்டிய ஒரு கட்டாய நிலை தற்போது ஏற்பட்டிருக்கிறது.
வெளிநாடுகளில் இருந்தும் பணியாளர்களை அமர்த்துவது போல் எமது நாட்டின் புனர் வாழ்வாளிக்கப்பட்ட இளைஞர், யூவதிகளுக்கு அமைச்சின் நேரடி மேற்பார்வையின் கீழ் முறையான பயிற்சி திட்டங்களை வழங்கி உள்நாட்டு தொழிற்துறைகளில் நிலவும் பற்றாக்குறைக்கு நிலையான தீர்வு வழங்கப்படவேண்டும் என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |