ஈரான் பொருளாதாரத்தை நசுக்கத் திட்டமிட்டுள்ளதாக ட்ரம்ப்! தெஹ்ரான் செய்துள்ள சபதம்
பொருளாதார அழுத்தத்தை ஏற்படுத்துவது குறித்து அமெரிக்க ஜனாதிபதி தெளிவுபடுத்தியதை அடுத்து, இது குறித்து ஈரான் நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டின் அரசாங்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது அமெரிக்க வியூகத்தின் ஒரு பகுதியாக இருந்தாலும் அதற்கான தக்க நடவடிக்கைகளை ஈரான் மேற்கொள்ளும் என்றும் செய்தியில் விவரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஈரானின் அரசியல்வாதியும் முதல் துணை ஜனாதிபதியுமான முகமது ரெசா அரெஃப், சந்தை கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஈரான் இதுவரை கண்டிராத நடவடிக்கை
கடந்த வாரம், அமெரிக்க நிதித்துறை செயலாளர் ஸ்காட் பெசென்ட் நியூஸ்மேக்ஸ் பேட்டி ஒன்றில், ஈரான் மீது இதுவரை கண்டிராத நடவடிக்கைகளை அமெரிக்கா செயல்படுத்தப் போவதாகக் கூறினார் .

இதன் மூலம், அமெரிக்கா ஈரானை தொடர்ந்து பொருளாதார ரீதியாகத் தனிமைப்படுத்தி, அதன் துறைமுகங்களை முற்றுகையிடும் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |