இந்தியாவில் டெலிகிராம் செயலிக்கு தடை - மத்திய அரசு அதிரடி
இந்தியாவில் டெலிகிராம் மெசேஜிங் செயலிக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தடையை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் பிறப்பித்துள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பாதுகாப்பு கவலைகளை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், தேர்வு முடியும் வரை தடை நீடிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
நீட் தேர்வுக்கான வினாத்தாள்
இது தொடர்பாக தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: அரசின் இந்த வழிகாட்டுதலை தேசிய தேர்வு முகமை வரவேற்கிறது.

தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000-இன் பிரிவு 69ஏ-ன் கீழ் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இந்த தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்தியாவில் ‘டெலிகிராம்’ அக்சஸ், நீட் மறுதேர்வு நடைபெற்று முடியும் வரை தடை செய்யப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதோடு இந்தச் செயலியில் ஜூன் 30 வரை மெசேஜ் எடிட்டிங் அம்சத்தை தற்காலிமாக தடை செய்யுமாறும் கோரியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மே3-ல் நடந்த நீட் தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே டெலிகிராம் செயலியில் பரவியதால் தற்போது இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |