இந்தியாவில் தங்குமிடமின்றி அலையும் 08 கோடிக்கு மேற்பட்ட நாய்கள் மற்றும் பூனைகள் -வெளிவந்தது புள்ளிவிபரம்
விலங்குகளை விரும்புவோர் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தக் கூடிய வகையில் புதிய புள்ளிவிவரம் ஒன்று வெளியாகி இருக்கிறது.
அதன்படி இந்தியாவில் சுமார் 80 மில்லியன் (8 கோடி) பூனைகள் மற்றும் நாய்கள் வீடற்றனவாக மதிப்பிடப்பட்டுள்ளமை ஒரு புதிய உலகளாவிய கணக்கெடுப்பு மூலம் தெரிய வந்திருக்கிறது.
இந்த கோடிக்கணக்கான நாய்கள் மற்றும் பூனைகள் ஷெல்டர்கள் அல்லது தெருக்களில் வாழ்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்கா, சீனா மற்றும் ஜேர்மனி போன்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது, இந்தியாவில் அதிக அளவு விலங்குகள் கைவிடப்பட்ட நிலை உள்ளதாக Mars Petcare India-வின் அறிக்கை தெரிவிக்கிறது. இது தவிர மேலும் சுமார் 88 லட்சம் தெரு நாய்கள் மற்றும் பூனைகள் காப்பகங்களில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
முன்னணி விலங்கு நல நிபுணர்களின் ஆலோசனைக் குழுவுடன், Mars Petcare India இணைந்து இந்தியாவில் 'செல்லப்பிராணிகளின் வீடற்ற நிலையின் நிலை'-க்கு பங்களிக்கும் காரணிகளைக் கண்டறிந்து அறிக்கையை வெளியிட்டு உள்ளது. இதில் ஒட்டுமொத்த குறியீட்டு எண் 10 என கணக்கில் கொண்டு அதில் இந்தியாவிற்கு 2.4 என்ற குறியீட்டு தரவரிசை அளிக்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் ஜேர்மனி 8.6 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது, இதைத் தொடர்ந்து இங்கிலாந்து 7.0 மற்றும் அமெரிக்கா 6.4 புள்ளிகளை பெற்றுள்ளன. இந்தியாவில் 9.1 மில்லியன் கைவிடப்பட்ட அல்லது தெரு பூனைகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ள அதே நேரத்தில் இந்தியாவில் மதிப்பிடப்பட்டுள்ள கைவிடப்பட்ட அல்லது தெரு நாய்களின் எண்ணிக்கை சுமார் 62 மில்லியனுக்கும் மேல் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த குறியீட்டு மாதிரியானது நாடு-குறிப்பிட்ட சூழல் மற்றும் சவால்களை முன்வைக்கிறது, இது "பிரச்சனையை நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் பாதிக்கும் முக்கிய காரணிகளை அடையாளம் காண உதவுகிறது". இருப்பினும் இந்தியாவில் சேகரிக்கப்பட்ட தரவுகள் வீட்டுக் கட்டுப்பாடுகள், நிதி வரம்புகள், நடைமுறைத் தடைகள் மற்றும் தெருக்களில் இருக்கும் செல்லப்பிராணிகளை பற்றிய விழிப்புணர்வு இல்லாமை போன்ற பல சவால்களை எடுத்து காட்டுகின்றன.
மக்கள் விலங்கு காப்பகங்களில் இருந்து அவற்றை தத்தெடுப்பதற்கு பதில் ப்ரீட் நாய்கள் மற்றும் பூனைகளை வாங்குகிறார்கள். மேலும் கணக்கெடுப்பின்படி, மக்கள் தொகையில் 68% பேர் வாரத்திற்கு ஒரு முறையாவது ஆதரவின்றி தெருவில் அலையும் பூனைகளை பார்ப்பதாகவும்(உலகளாவிய சராசரி 43%), மற்றும் 77% பேர் வாரத்திற்கு ஒரு முறையாவது தெருநாய்களை பார்ப்பதாக ((உலக சராசரி 41%) கூறுகிறார்கள்.
மேலும் உலக அளவில் இருப்பதாய் விட இந்தியாவில் செல்லப்பிராணிகளை கைவிடும் அளவுகள் அதிகமாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் சுமார் 34% பேர் நாயை தெருவில் விட்டுவிட்டதாகவும், 32% பேர் பூனையை கைவிட்டதாகவும் கூறியுள்ளனர். சீனாவில் வீடற்ற பூனைகள் மற்றும் நாய்கள் 7.5 கோடியும், அமெரிக்காவில் 4.8 கோடியும் இருப்பதாக அறிக்கை தெரிவிக்கிறது. இந்த தரவரிசை பட்டியலில் மெக்சிகோ (3.9), தென்னாபிரிக்கா (4.0), சீனா (4.8), ரஷ்யா (5.2), கிரீஸ் (5.4) போன்ற நாடுகளுக்குக் கீழே இந்தியா உள்ளது குறிப்பிடத்தக்கது.