ராஜீவ் காந்தி படுகொலை விவகாரம் - விடுதலையான சாந்தன் மற்றும் முருகன் வெளியிட்டுள்ள கருத்து!

Rajiv Gandhi Attempted Murder Sri Lanka India Supreme Court of India
By Kalaimathy Nov 12, 2022 10:48 AM GMT
Report

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலையில் தண்டனை அனுபவித்து வந்த தாம் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறித்து முருகன் மற்றும் சாந்தன் ஆகியோர் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில் தாம் இலங்கைக்கு செல்ல தமிழக அரசு உதவிகளை வழங்க முன்வர வேண்டும் என சாந்தன் கோரியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலையில் தண்டனை அனுபவித்து வந்த முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட 6 பேர் நேற்று இந்திய உச்ச நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டனர்.

விடுதலைக்காக போராட்டம்

ராஜீவ் காந்தி படுகொலை விவகாரம் - விடுதலையான சாந்தன் மற்றும் முருகன் வெளியிட்டுள்ள கருத்து! | India Rajiv Gandhi Murder Suspects Murugan Court

இந்த நிலையில் வேலூர் சிறைச்சாலையிலுள்ள முருகன் மற்றும் சாந்தனை சட்டத்தரணி ராஜகுரு நேற்று மாலை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது தமது விடுதலைக்காக போராடிய சட்டத்தரணிகள்,  தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்ராலின், மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவற்றிற்கு அவர்கள் நன்றியை தெரிவித்ததாக சட்டத்தரணி ராஜகுரு தெரிவித்துள்ளார்.

அத்துடன் முருகன் சிறையிலிருந்து வெளியே வந்த பின்னர் மனைவி நளினியுடன் இணைந்து வாழவுள்ளதாக கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் குடும்பத்தினருடன் ஆலோசனை செய்து தமிழகத்தில் தங்கியிருப்பதா? அல்லது லண்டன் செல்வதா என்பது குறித்து முடிவெடுக்கவுள்ளதாகவும் முருகன் தெரிவித்ததாக சட்டத்தரணி ராஜகுரு தெரிவித்துள்ளார்.

ஆலய வழிபாடு

ராஜீவ் காந்தி படுகொலை விவகாரம் - விடுதலையான சாந்தன் மற்றும் முருகன் வெளியிட்டுள்ள கருத்து! | India Rajiv Gandhi Murder Suspects Murugan Court

இந்த நிலையில் சிறையிலிருந்து வெளியே வந்த பின்னர் தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களுக்கு சென்று வழிபடவுள்ளதாகவும் சாந்தன் தெரிவித்தார்.

மேலும் தனது சொந்த நாடான இலங்கைக்கு செல்ல உள்ளதாகவும் கடவுச் சீட்டு காலாவதியாகியுள்ளமையினால் அதனை புதுப்பிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சாந்தன் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த நிலையில் 6 பேரில் ஒருவரான ரவிச்சந்திரனும் விடுதலை செய்யப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாக அவரது தாயார் ராஜேஸ்வரி தெரிவித்துள்ளார்.

நளினி சிறையில்

ராஜீவ் காந்தி படுகொலை விவகாரம் - விடுதலையான சாந்தன் மற்றும் முருகன் வெளியிட்டுள்ள கருத்து! | India Rajiv Gandhi Murder Suspects Murugan Court

இதேவேளை, நளினியின் விடுதலை தொடர்பான உத்தரவு நகல் இன்னும் கிடைக்காமையினால் இன்று சிறையிலிருந்து விடுதலையாக வாய்ப்பு இல்லை என வேலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான் தெரிவித்துள்ளார்.

இதனால், அவர் எதிர்வரும் திங்கட்கிழமை விடுதலை செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Noisiel, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Wellawatte, Orpington, United Kingdom

12 Jun, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Mantes-la-Jolie, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு

11 Jun, 2025
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Scarbrough, Canada, Ontario, Canada

14 Jun, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, கிளிநொச்சி, Kleve, Germany

26 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, Stuttgart, Germany, Scarborough, Canada

10 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சுவிஸ், Switzerland

14 Jun, 2013
மரண அறிவித்தல்

மீசாலை, Frankfurt, Germany, Mörfelden-Walldorf, Germany

11 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, சுண்டிக்குளி, Scarborough, Canada

11 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
மரண அறிவித்தல்

இருபாலை, திருநெல்வேலி, கொழும்பு, London, United Kingdom

07 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024