கடற்றொழிலாளர்களின் பிரச்சினையை புறக்கணிக்கும் சாகல: இந்திய விஜயம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை

Sri Lanka Politician India Sagala Ratnayaka
By Laksi Mar 29, 2024 02:48 PM GMT
Report

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அதிபர் பணிக்குழுவின் பிரதிநிதி சாகல ரத்னாயக்க கடற்றொழிலாளர்களின் பிரச்சினையைப் பற்றி எந்தவித அக்கறையும் செலுத்தவில்லை என அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் எம்.வி.சுப்ரமணியம் கவலை வெளியிட்டுள்ளார்.

அவரது இல்லத்தில் இன்று(29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில், “தமிழ்நாட்டில் காரைக்கால் பட்டினத்திலே இருக்கின்ற கடற்றொழிலாளர்கள், இலங்கையில் சிறைபிடிக்கப்பட்டு உள்ள தமது கடற்றொழிலாளர்களை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டத்தினை மேற்கொண்டிருக்கின்றார்கள்.

இந்திய-சீன எல்லை விவகாரம்: எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்

இந்திய-சீன எல்லை விவகாரம்: எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்

இந்தியா கடற்றொழிலாளர்கள்

விடுதலை செய்யாவிட்டால் மக்களவைத் தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக ஒரு அறைகூவல் விடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்தியா கடற்றொழிலாளர்கள் மனிதாபிமான ரீதியில் சிந்திக்க வேண்டும்.

கடற்றொழிலாளர்களின் பிரச்சினையை புறக்கணிக்கும் சாகல: இந்திய விஜயம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை | Indian Fishermen Issue Sagala India

நீங்கள் இங்கே வந்து செய்கின்ற தொழிலானது தடை செய்யப்பட்ட ஒரு தொழில்முறையென அனைவருக்கும் தெரியும். அதையும் மீறி அடாவடித்தனமாக வந்து எமது வளங்களையும் அழித்து, வாழ்வாதாரத்தை சூறையாடி சென்று எமது வயிற்றில் அடிக்கின்றீர்கள், நமது தொழில் முதல்களை அழித்து செல்கின்றீர்கள்.

இந்த தொழிலானது ஒரு கெடுதலான தொழில் என நீங்களும் ஐந்துக்கும் மேற்பட்ட தடவைகள் தெரிவித்திருக்கின்றீர்கள், நீங்களும் அதை ஏற்றுக் கொண்டிருக்கின்றீர்கள்.

இழுவை மடி தொழிலை விட்டுவிட்டு மாற்று தொழிலுக்கு செல்வதாக ஆணித்தரமாக கூறியுள்ளீர்கள்.இலங்கையிலுள்ள சட்டத்திற்கு அமைவாகவே உங்களது படகுகள் கைது செய்யப்படுகின்றன.

அனுரவை நேரடி விவாதத்திற்கு அழைத்த எதிர்க்கட்சி

அனுரவை நேரடி விவாதத்திற்கு அழைத்த எதிர்க்கட்சி

இழுவைமடி படகுகள் 

இந்த சட்டமானது 1979 ஆம் ஆண்டுக்கு முற்பகுதியில் கொண்டுவரப்பட்டது. 1974 - 1976களிலே இரண்டு நாடுகளுக்கும் இடையே இடம்பெற்ற பேச்சு வார்த்தைகளின்போது முதன்முதலாக இலங்கை இந்திய கடல் எல்லைக்கோடு அடையாளப்படுத்தப்பட்டது.

கடற்றொழிலாளர்களின் பிரச்சினையை புறக்கணிக்கும் சாகல: இந்திய விஜயம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை | Indian Fishermen Issue Sagala India

இதற்கு அனுசரணையாகவே 1979 ஆம் ஆண்டு வெளிநாட்டு மீன்பிடி படகுகள் ஒழுங்குப் பிரமாணம் என்ற சட்டம் கொண்டுவரப்பட்டது.

உங்களுடன் போராடி, பேச்சுவார்த்தைகள் நடாத்தி எங்களுக்கு எந்த விதமான தீர்வும் எட்டாத நிலையில் தான் அதாவது ஏறக்குறைய 35 வருடங்களுக்கு பின்னர் 2018ஆம் ஆண்டு நாங்கள் நீதிமன்றத்தை நாடியதால் தான் இன்று இந்த இழுவைமடி படகுகள் கைது செய்யப்படுகின்றன.

முதல் தடவை கைது செய்யப்படுகின்ற கடற்றொழிலாளர்கள் விடுதலை செய்யப்படுகின்றார்கள். படகுகள் பறிமுதல் செய்யப்படுகின்றன. இரண்டாவது தடவை எல்லை தாண்டிவரும் கடற்றொழிலாளர்களே சிறையில் அடைக்கப்படுகின்றார்கள்.இது திட்டமிட்டு செய்யப்படுவதில்லை. தொடர்ச்சியாக பயமின்றி அவர்கள் வருவதாலேயே இவ்வாறு கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்படுகின்றார்கள்.

அரச ஊழியர்களின் வயது எல்லை! வேலைக்காக காத்திருப்போருக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தி

அரச ஊழியர்களின் வயது எல்லை! வேலைக்காக காத்திருப்போருக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தி

கடற்றொழிலாளர் பிரச்சினை

இந்தப் படகுகளை கைது செய்யுமாறு நாங்கள் கடற்படைக்கு தொடர்ச்சியாக அழுத்தங்களை கொடுத்து வருகின்றோம். அவர்கள் இவ்வாறு கைதுகளை செய்யும்போது அவர்களுக்கு நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

கடற்றொழிலாளர்களின் பிரச்சினையை புறக்கணிக்கும் சாகல: இந்திய விஜயம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை | Indian Fishermen Issue Sagala India

அதிபர் பணிக்குழாமின் பிரதிநிதியான சாகல ரத்னாயக  இந்தியாவிற்கு விஜயம் செய்திருக்கின்றார். அங்கே அவர் எமது கடற்றொழிலாளர் பிரச்சினை பற்றி பேசவில்லை. அவர் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் சாதகமான விடயங்களை மாத்திரமே பேசுகின்றார் தவிர கடற்றொழிலாளர்கள் பிரச்சினையை பற்றி தொட்டுக் கூட பார்க்கவில்லை.

இவ்வாறு நாங்கள் எமது அரசாங்கத்தாலும் இந்தியாவாலும் ஒதுக்கப்பட்டவர்களாக இருக்கின்றபடியால் தான் இந்த சட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு நாங்கள் வலியுறுத்தி வருகின்றோம். உங்கள் மீது இருக்கின்ற வெறுப்பிலேயோ அல்லது காழ்ப்புணர்ச்சியிலேயோ நாங்கள் இதனை செய்யவில்லை.

எனவே இரண்டு நாட்டு கடற்றொழிலாளர்களும் வாழ வேண்டுமாக இருந்தால் இந்த தடை செய்யப்பட்ட இழுவைமடி தொழிலினை உடனடியாக கைவிட வேண்டும் என எமது அமைப்பின் சார்பில் நான் கோரிக்கையை முன்வைக்கின்றேன்” என்றார். 

ஞானசார தேரர் வைத்தியசாலையில் அனுமதி!

ஞானசார தேரர் வைத்தியசாலையில் அனுமதி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Brampton, Canada

10 Dec, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, Markham, Canada

10 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கோண்டாவில் கிழக்கு, வெள்ளவத்தை

28 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

04 Dec, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொக்குவில், திருகோணமலை, கொழும்பு, Croydon, United Kingdom

08 Dec, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Lingenfeld, Germany

08 Dec, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், மலேசியா, Malaysia, கொட்டடி, Scarborough, Canada

12 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, பேர்ண், Switzerland

12 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம், கனடா, Canada

17 Nov, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, கொழும்பு, London, United Kingdom

08 Dec, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, சென்னை, India

14 Dec, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, இந்தியா, British Indian Ocean Terr., தெஹிவளை

12 Dec, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், உரும்பிராய்

06 Dec, 2023
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு

24 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Montreal, Canada, Toronto, Canada

14 Dec, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, சித்தன்கேணி

13 Dec, 2022
நன்றி நவிலல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கத்தானை, மீசாலை கிழக்கு, Ottawa, Canada

13 Dec, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சாவகச்சேரி, வவுனியா, சென்னை, India

29 Nov, 2025
4ம், 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், முள்ளியவளை

11 Dec, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொல்லன்கலட்டி, Stryn, Norway, Tromso, Norway

10 Dec, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வவுனியா, Toronto, Canada

11 Dec, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Vaughan, Canada

12 Dec, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, நெல்லியடி வடக்கு

02 Dec, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கட்டுடை, Cornwall, United Kingdom

08 Dec, 2020