எல்லை தாண்டிய 17 பாண்டிச்சேரி கடற்றொழிலாளர்களுக்கு விளக்கமறியல்!
இலங்கைக் கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட 17 பாண்டிச்சேரி கடற்றொழிலாளர்கள் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு, பாண்டிச்சேரியை சேர்ந்த 17 கடற்றொழிலாளர்கள் நெடுந்தீவுக் கடற்பரப்பில் படகொன்றில் கடற்றொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட பாண்டிச்சேரி பகுதியை சேர்ந்த 17 மீனவர்களும் கடற்படையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
விளக்கமறியல்
குறித்த வழக்கினை விசாரித்த ஊர்காவற்றுறை நீதவான் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை கடற்றொழிலாளர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
இதேவேளை, வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 36 படகுகளுடன் 279 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
