விசாரணைகளுக்கு ஒத்துழைக்க தயார் : சிந்துஜாவின் மரணம் குறித்து நீடிக்கும் சர்ச்சை

Mannar Sri Lanka Hospitals in Sri Lanka
By Shalini Balachandran Aug 15, 2024 03:51 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த 28 ஆம் திகதி உயிரிழந்த சிந்துஜா என்பவரின் மரணம் குறித்து ஒரு அரச நிறுவனத்தில் பணிபுரியும் அரச ஊழியர்கள் என்ற வகையில் நாங்கள் விசாரணைகளுக்கு ஒத்துழைத்ததோடு நிறுவன சட்ட திட்டங்களுக்கு அமைவாக நடந்து கொண்டோம் அதனால் பொதுவான கருத்துக்களை நாம் வெளியிட்டிருக்க வில்லை என மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த விடயமானது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்கள் அபிவிருத்திக்குழு ஊடாக ஊடகங்களுக்கு இன்றைய தினம் வியாழக்கிழமை (15) மாலை  அனுப்பி வைக்கப்பட்ட ஊடக அறிக்கை ஒன்றிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “28.07.2024 அன்று மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் மரணித்த ஆ.சிந்துஜா என்ற இளம் தாயின் மரணம் வைத்தியர்களாகிய எங்களையும் வேதனைப்படுத்தியது மட்டுமன்றி உங்களைப் போன்று அதே அளவு மன அமைதியின்மையையும் ஏற்படுத்தியது உண்மை.

சற்றுமுன் வெளியானது ஜனாதிபதியின் தேர்தல் சின்னம்

சற்றுமுன் வெளியானது ஜனாதிபதியின் தேர்தல் சின்னம்

நிறுவனத்தில் பணி

ஆயினும், ஒரு அரச நிறுவனத்தில் பணிபுரியும் அரச ஊழியர்கள் என்ற வகையில் நாங்கள் விசாரணைகளுக்கு ஒத்துழைத்ததோடு நிறுவன சட்ட திட்டங்களுக்கு அமைவாக நடந்து கொண்டோம்.

அதனால் பொதுவான கருத்துக்களை நாம் வெளியிட்டிருக்கவில்லை ஆனால் நிறுவனத்தின் தலைவர் என்ற அடிப்படையில் வைத்தியசாலையின் பணிப்பாளர் இவ் விடயத்திற்கு நாங்கள் பொறுப்பு கூற கடமைப்பட்டிருக்கிறோம் ஆகவே பக்கச்சார்பற்ற விசாரணை நடைபெற்று உண்மைகள் கண்டறியப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஊடகங்கள் வாயிலாக அறிவித்திருந்தார்.

விசாரணைகளுக்கு ஒத்துழைக்க தயார் : சிந்துஜாவின் மரணம் குறித்து நீடிக்கும் சர்ச்சை | Information About The Death Of Mother In Mannar

சம்பவம் நடந்த தினத்திலிருந்து நிறுவன ஊழியர்களாகிய நாம் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தோம்,

  1. 28-07-2024 - தாயின் மரணம்
  2. 29-07-2024 – பாதிக்கப்பட்ட குடும்பத்தை உள்ளடக்கிய வைத்தியசாலை பணிப்பாளர் தலைமையிலான மீளாய்வு நடைபெற்றது அத்தோடு தாயின் மரணம் வைத்தியசாலையின் பணிப்பாளரால் சுகாதார அமைச்சிற்கு அறிவிக்கப்பட்டது.
  3. 30-07-2024 - வைத்தியசாலை பணிப்பாளரால் ஆரம்பகட்ட புலன் விசாரணை குழு நியமிக்கப்பட்டது.
  4. 31-07-2024 - பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளரால் மரண விசாரணை கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
  5. 01-08-2024 - வைத்தியசாலை பணிப்பாளரால் மாகாண சுகாதார பணிமனையின் சுயாதீனமான விசாரணைக்காக விண்ணப்பிக்கப்பட்டது.
  6. 02-08-2024 - பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளரின் ஆரம்ப புலன் விசாரணை குழு நியமிக்கப்பட்டது.
  7. 03-08-2024 - மாகாண சுகாதார பணிமனையின் விசாரணைக் குழு நியமிக்கப்பட்டது.
  8. 08-08-2024 - சுகாதார அமைச்சின் விசாரணை மீளாய்வு நடைபெற்றது.

ரணில் என்ற நொண்டி குதிரையுடன் சேர்ந்துள்ள கண்டி கழுதை : மனோ கணேசன் விளாசல்

ரணில் என்ற நொண்டி குதிரையுடன் சேர்ந்துள்ள கண்டி கழுதை : மனோ கணேசன் விளாசல்

பொது அமைப்பு

மேற்குறிப்பிட்ட நிகழ்வுகள் நடைபெற்று கொண்டிருக்கையில் அது தொடர்பான விளக்கங்கள் சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கும் பொது அமைப்புகளுக்கும் கலந்துரையாடல்கள் மூலம் அறிய தரப்பட்டு கொண்டிருந்தன.

விசாரணைகளுக்கு ஒத்துழைக்க தயார் : சிந்துஜாவின் மரணம் குறித்து நீடிக்கும் சர்ச்சை | Information About The Death Of Mother In Mannar

இவற்றிலிருந்து அன்பானதும் பொறுப்பு மிக்கதுமான மன்னார் மாவட்ட மக்களுக்கு நாம் தெரியப்படுத்துவது, நிறுவன சட்ட திட்டங்களுக்கு அமைந்து நாம் கருத்து வெளியிடாமல் இருந்ததென்பது எதையும் மூடி மறைக்கும் நோக்கில் இழுத்தடிக்கும் நோக்கிலோ அல்லது பிழைகளுக்கு துணை போகும் நோக்கிலோ அல்ல.

இது தொடர்பான தற்போதைய நிலையை நீங்கள் அறிந்திருப்பீர்கள் தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் அனைத்தும் சுகாதார அமைச்சின் மூலம் தீர்மானிக்கப்படும் என்பதால் இறந்த இளம் தாய்க்கு நீதி வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என்பதை கடிதம் மூலம் சுகாதார அமைச்சிற்கு அறிக்கை இட்டுள்ளோம்.

ரணில் என்ற நொண்டி குதிரையுடன் சேர்ந்துள்ள கண்டி கழுதை : மனோ கணேசன் விளாசல்

ரணில் என்ற நொண்டி குதிரையுடன் சேர்ந்துள்ள கண்டி கழுதை : மனோ கணேசன் விளாசல்

வைத்திய சேவை

தற்சமயம் பல்வேறு காரணங்களால் மக்களுக்கும் வைத்திய சேவைக்கு இடைப்பட்ட இடைவெளி வெகுவாக அதிகரித்துள்ளது இது ஆரோக்கியமான ஒரு சூழ்நிலை அல்ல ஆகவே வைத்தியசாலையின் சேவைகள் தொடர்பான முறைப்பாடுகளை யோ முன்னேற்றங்கள் தொடர்பான கருத்துக்களையோ எழுத்து மூலம் சம்பந்தப்பட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அறியத்தருவது மக்களான உங்களின் தார்மீகக் கடமையாகும் என்பதையும் இவ்வறிக்கை மூலம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

இது உங்கள் வைத்தியசாலை, நாங்கள் உங்கள் சேவையாளர்கள் இங்கு இடம்பெற்ற பிழை ஒன்றை வைத்து அனைவரையும் பொதுமைப்படுத்தி குற்றம் சாட்டுவது என்பது ஒட்டுமொத்த வைத்தியசாலையையும் மன அழுத்தத்திற்கு உள்ளாக்கி கவலையடையச் செய்கிறது.

விசாரணைகளுக்கு ஒத்துழைக்க தயார் : சிந்துஜாவின் மரணம் குறித்து நீடிக்கும் சர்ச்சை | Information About The Death Of Mother In Mannar

எனினும் நாம் உங்களுடன் சேர்ந்து பயணிப்போம் இந்த விடயத்தில் மட்டுமன்றி எதிர்வரும் சந்தர்ப்பங்களிலும் உங்களுடன் இணைந்து வைத்தியசாலையை முன்னேற்றுவதை எமது மனப்பூர்வமான கடமையாக கருதுகின்றோம்.

இந்த அறிக்கையானது பொதுமக்களுக்கு தெளிவினை ஏற்படுத்தி மக்களுக்கும் வைத்தியசாலைக்கும் இடையிலான நம்பிக்கையை மீளக் கட்டி எழுப்பும் செயற்பாடுகளில் ஒன்றாகவே வெளியிடப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வலுவடையும் இலங்கை ரூபாவின் பெறுமதி

வலுவடையும் இலங்கை ரூபாவின் பெறுமதி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
GalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, Toronto, Canada

01 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு 6ம் வட்டாரம், Ajax, Canada

30 Jul, 2025
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், Scarborough, Canada

03 Aug, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர் முல்லைப்பிலவு, Berlin, Germany

04 Jul, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, இணுவில், கொழும்பு, Scarborough, Canada

30 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

திருகோணமலை, மீசாலை கிழக்கு

01 Aug, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை கிழக்கு, London, United Kingdom

29 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Paris, France

25 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டியன்தாழ்வு, Niederkrüchten, Germany

01 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Toronto, Canada, Mulhouse, France

02 Aug, 2024
மரண அறிவித்தல்

தையிட்டி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024