யாழ்ப்பாணத்தில் காணாமற்போன கடற்றொழிலாளர்கள்: வெளியான தகவல்
கடற்றொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல்போயுள்ள யாழ். குருநகர் பகுதியை சேர்ந்த இரு கடற்றொழிலாளர்கள் தமிழகத்தின் இராமநாதபுரம் பகுதியில் கரை சேர்ந்துள்ளனர்.
46 வயதுடைய விமலேந்திரன் ஞானராஜ், 54 வயதுடைய பூலோகதாசன் ஆகியோரே கடந்த 15 ஆம் திகதி ஊர்காவற்துறையிலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல்போயிருந்தனர்.
தமிழகத்தின் இராமநாதபுரம் பகுதியில் கரை ஒதுங்கினர்
குறித்த கடற்றொழிலாளர்களை தேடும் நடவடிக்கை துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வந்தநிலையில் தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி மீன் பிடி துறைமுகத்தில் இருந்து குறிப்பிடத்தக்க தூரத்தின் நடுக்கடலில் பைபர் படகில் இலங்கை கடற்றொழிலாளர்கள் இருவர் தத்தளிப்பதாக தமிழக கரையோர காவல்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இருவரையும் மீட்டு கரைக்கு கொண்டு சென்றனர்.
கஞ்சா பொட்டலங்கள்
இந்நிலையில் கடற்றொழிலாளர்கள் தத்தளித்த கடற்பகுதியில் ஒரு மூட்டையில் கஞ்சா பொட்டலங்கள் இருந்ததால் அவர்கள் இருவருக்கும் கஞ்சா பொட்டலங்களுக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் அந்நாட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்… 2 வாரங்கள் முன்

நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
2 வாரங்கள் முன்