அமைச்சர் நிமல் சிறி பால டி சில்வாவை விடாது துரத்தும் இலஞ்ச பண விவகாரம்
Nimal Siripala De Silva
Sri Lanka Police Investigation
Japan
By Jaso
விசாரணை நடத்த தீர்மானம்
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கு எதிரான இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
ஊழல் எதிர்ப்பு முன்னணியினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜப்பானிய நிறுவனம் ஒன்றிடம் இலஞ்சப் பணம்
ஜப்பானிய நிறுவனம் ஒன்றிடம் இலஞ்சப் பணம் கோரப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலேயே இந்த முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இந்த வாரம் முதற்கட்ட வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படவுள்ளதுடன், அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவையும் வாக்குமூலம் பதிவுசெய்வதற்காக ஆணைக்குழுவிற்கு அழைக்கப்படவுள்ளார்.
கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதரகம் மற்றும் ஜப்பான் தாய்ஸ் நிறுவனத்திடமும் விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 19 Evening
3ம் ஆண்டு நினைவஞ்சலி