யாழ்ப்பாணம் - கிளிநொச்சி - மாங்குளத்தில் முதலீட்டு வலயங்கள்..!
Jaffna
Kilinochchi
Sri Lankan Peoples
By Kiruththikan
வடக்கு மாகாணத்தில் மூன்று இடங்களில் முதலீட்டு வலயங்கள் அமைப்பதற்கு இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அதற்குரிய அமைச்சரவைப் பத்திரங்கள் விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை முதலீட்டுச் சபையின் பிரதிநிதி, நேற்று(04.05.2023) இடம்பெற்ற யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,"யாழ்ப்பாண மாவட்டத்தில் காங்கேசன்துறையில் சீமெந்து தொழிற்சாலை அமைந்துள்ள இடத்தை நேரில் சென்று பார்வையிட்டுள்ளோம்.
அங்கே முதலீட்டு வலயம் அமைக்க உத்தேசித்துள்ளோம்.
கிளிநொச்சியில் இரசாயன தொழிற்சாலை அமைந்துள்ள இடத்திலும், மாங்குளத்தில் 400 ஏக்கரிலும் முதலீட்டு வலயங்கள் அமைக்க உத்தேசித்துள்ளோம்"என தெரிவித்துள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி