போர் நிறுத்தத்திற்கு மத்தியில் ஈரான் உச்ச தலைவர் வெளியிட்ட அறிவிப்பால் பதற்றம்
அமெரிக்காவுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பொன்று மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதன்போது, அவர் தனது தந்தை மற்றும் போரில் கொல்லப்பட்ட அனைத்து தியாகிகளுக்காகவும் பழிவாங்கும் நோக்கத்தில் ஈரான் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
தீர்க்கப்படவுள்ள கணக்கு
சிந்தப்பட்ட ஒவ்வொரு சொட்டு இரத்தத்திற்கும் நிச்சயம் கணக்கு தீர்க்கப்படும்" என்றும் அவர் மொஜ்தபா கூறியுள்ளார்.

Image Credit: RNZ
மேலும், சர்வதேச வர்த்தகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணையின் நிர்வாகத்தை ஈரான் ஒரு புதிய கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்றும், அதன் மீதான தனது ஆதிக்கத்தை நிலைநாட்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
போரை விரும்பாத ஈரான்
ஈரான் ஒருபோதும் போரை விரும்புவதில்லை என்றாலும், தனது உரிமைகளைத் தியாகம் செய்யப் போவதில்லை என்பதையும் மொஜ்தபா கமேனி அறிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த போரினால் ஏற்பட்ட ஒவ்வொரு சேதத்திற்கும், காயமடைந்தவர்களின் சிகிச்சைக்கும் மற்றும் உயிர்நீத்தவர்களின் தியாகத்திற்கும் உரிய இழப்பீட்டை ஈரான் கண்டிப்பாகக் கோரும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |