தாக்கப்பட்டது கப்பல் : கடலில் தத்தளித்த 28 இந்திய மாலுமிகளை மீட்டது ஈரான்
ஈரானின் கடல் எல்லைக்கு அருகே தாக்குதலுக்கு உள்ளான மொசாம்பிக் கொடி ஏற்றப்பட்ட கப்பலில் இருந்த 28 இந்திய மாலுமிகளும் ஈரானால் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
ஈரானிய கடல் எல்லைக்குள் நுழைந்தபோது "விரோத சக்திகளால்" குறிவைக்கப்பட்டதைத் தொடர்ந்து, 'திஷா' என்ற எண்ணெய் கப்பல் ஆபத்து சமிக்ஞையை அனுப்பியது.
ஈரானிய கடலோர காவல்படைக்கு ஆபத்து அழைப்பு
"இந்தச் சம்பவம் நடந்தவுடன், கப்பல் உடனடியாக ஈரானிய கடலோரக் காவல்படைக்கு ஆபத்து அழைப்பை அனுப்பியது," என்று இந்தியாவிற்கான ஈரானின் தூதர் முகமது ஃபத்தாலி, ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

"இதற்குப் பதிலளிக்கும் விதமாக, சம்பந்தப்பட்ட ஈரானிய கடல்சார் மற்றும் மீட்பு அதிகாரிகள் தாமதமின்றி சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டு, உடனடியாக மீட்பு நடவடிக்கைகளைத் தொடங்கினர்.
அனைத்து மாலுமிகளும் பாதுகாப்பாக மீட்பு
கப்பலில் இருந்த 28 இந்தியர்கள் உட்பட அனைத்து மாலுமிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர், மேலும் அவர்கள் நலமாக உள்ளனர்."என்று அவர் தெரிவித்தார்.

ஹோர்முஸ் நீரிணையில் வெளிநாட்டு கடற்படை தலையிடுவதற்கு எதிராக ஃபத்தாலி எச்சரித்தார். பிராந்தியத்திற்கு அப்பாற்பட்ட இராணுவப் படைகளின் இருப்பும் தலையீடும் அப்பிராந்தியத்தின் பாதுகாப்பை மேம்படுத்தவில்லை என்பதையும், மாறாக, அவை பதட்டங்களை அதிகரித்து, மேலும் நிலையற்ற தன்மைக்கு வழிவகுத்துள்ளன என்பதையும் அனுபவம் மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளது என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |