ஒரு வாரத்தில் இரண்டாவது சம்பவம் : ஈரானில் இராணுவ உலங்கு வானூர்தி விழுந்து நொருங்கியது
மத்திய ஈரானில் உள்ள ஒரு பழம் மற்றும் காய்கறி சந்தையில் ஈரானிய இராணுவ உலங்கு வானூர்தி விழுந்து நொரு்கியதில் நான்கு பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
ஈரான் தலைநகர் தெஹ்ரானுக்கு தெற்கே சுமார் 330 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டோர்ச்சே நகரில், நாட்டின் இஸ்பஹான் மாகாணத்தில் இந்த விபத்து நடந்ததாக ஈரானிய அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. ஜூன் மாதம் ஈரான்-இஸ்ரேல் போரின் போது அமெரிக்காவால் தாக்கப்பட்ட அணுசக்தி தளம் இஸ்பஹானில் உள்ளது.
பயிற்சியில் ஈடுபட்டவேளை விபத்து
இராணுவ உலங்கு வானூர்தி பயிற்சியில் ஈடுபட்டு இருந்ததாக அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. விமானி மற்றும் துணை விமானி விபத்தில் இறந்தனர்.

விபத்து காரணமாக சந்தையில் இருந்த குப்பைகள் மற்றும் புகை எழும் காட்சிகளைக் காட்டும் காணொளிகள் வெளியாகி உள்ளன.
விமானிகள் உட்பட நால்வர் பலி
ஈரானின் ஃபார்ஸ் செய்தி நிறுவனம், சந்தையில் இருந்த இரண்டு பேர் விபத்தில் இறந்ததாக கூறியது.

ஈரானில் ஒரு வாரத்திற்குள் இது இரண்டாவது விபத்து ஆகும். ஈரானின் மேற்கு நகரமான ஹமேடான் அருகே ஒரு F-4 போர் விமானம் விபத்துக்குள்ளானது, அந்த விபத்தின் போது விமானிகளில் ஒருவர் கொல்லப்பட்டார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |