ஈரானின் தாக்குதல்களில் அழிந்து கொண்டிருக்கிறதா இஸ்ரேல்…!
இஸ்ரேல், அமெரிக்கா கூட்டணியில் ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அதன் உச்ச தலைவர் அலி காமேனி உட்பட படைத்தலைவர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்கு பின்னர் இஸ்ரேலை குறிவைத்து ஏவுகணை தாக்குதலை நடத்திவருகிறது ஈரான்.
ஈரானின் இந்த ஏவுகணை தாக்குதலில் இஸ்ரேலுக்கு பெரும் சேதம் ஏற்பட்டதா அத்துடன் இந்த தாக்குதல்கள் மூலம் இஸ்ரேல் அழிவுறும் நிலைக்கு தள்ளப்பட்டதா என்பதை ஆராய்கிறது ஐபிசி தமிழ் உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி.
உண்மையில் தற்போது ஈரானின் ஏவுகணை தாக்குதல் குறைவடைந்துள்ளதாக இஸ்ரேல் தலைநகரில் உள்ள ஐபிசி செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இதற்கு முக்கிய காரணம் ஈரானின் ஏவுகணை செலுத்திகளை இஸ்ரேல் வேட்டையாடுவதுதான் காரணம் என்கிறார் அவர்
இன்றைய நிலைவரப்படி இஸ்ரேல் விமான சேவையை ஆரம்பித்துள்ளது. அரச அலுவலகங்கள் இயங்கலாம். பாடசாலைகளில் இணையவழிமூலம் பாடங்களை நடத்தலாம் என இஸ்ரேல் அரசாங்கம் அறிவித்துள்ளது.
அப்படியென்றால் ஈரானின் தாக்குதல்களில் அழிவுறுகிறதா இஸ்ரேல். விரிவாக காணொளியை பார்வையிட்டுஉண்மையை அறிந்து கொள்ளுங்கள்...