காசாவுக்குள் இஸ்ரேலின் வதை முகாம்கள்! அம்பலமாகும் மனிதாபிமான நகரத்தின் மறுபக்கம்
இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் (Israel Katz) காசாவின் ரஃபாவில் “மனிதாபிமான நகரம்” (humanitarian city) என்று அழைக்கப்படும் முகாமை அமைக்க திட்டமிட்டிருப்பதாக இஸ்ரேலிய ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இந்த முகாமில் சுமார் 21இலட்சம் பாலஸ்தீனியர்களை குடியமர்த்துவது திட்டமாக உள்ளதாக கூறப்படுகிறது.
எனினும், இந்தத் திட்டம் “வதை முகாம்கள்” (concentration camps) உருவாக்கப்படுவதாகவும், இது மனித குலத்திற்கு எதிரான குற்றமாகவும் (crime against humanity) இருக்கலாம் என சர்வதேச அளவில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
அகதிகளுக்கான நிவாரண பணி
ஐ.நா.வின் பாலஸ்தீன அகதிகளுக்கான நிவாரண மற்றும் பணி முகமையின் (UNRWA) தகவல் தொடர்பு இயக்குநர் ஜூலியட் டூமா (Juliette Touma), இத்தகைய பலவந்தமான இடமாற்றங்களை UNRWA முற்றிலும் நிராகரிப்பதாக தெரிவித்துள்ளார்.
இது “இரண்டாவது நக்பா” (Second Nakba) போன்ற பேரழிவை ஏற்படுத்தக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
காசாவில் 2023 ஒக்டோபர் 7 முதல் நடைபெற்று வரும் இஸ்ரேல் - ஹமாஸ் போரில் 46,899 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும், 1,10,725 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் போரில் பொதுமக்கள் பகுதிகளான பாடசாலைகள், மதஸ்தலங்கள், மற்றும் அகதிகள் முகாம்கள் மீதும் தாக்குதல்கள் நடந்துள்ளதாகவும் சில அறிக்கைகள், இந்தத் திட்டம் காசா மக்களை ரஃபாவில் ஒரு முகாமிற்கு மாற்றிய பின், அவர்களை கிழக்கு ஆபிரிக்க நாடுகளான சூடான், சோமாலியா, அல்லது சோமாலிலாந்திற்கு இடம்பெயர்த்துவதற்கு அமெரிக்காவும் இஸ்ரேலும் திட்டமிட்டுள்ளதாகவும் ஜூலியட் டூமா தெரிவித்துள்ளார்.

