அனைவருக்கும் இலங்கையர்கள் என்ற அடையாளம் - நீதி அமைச்சர் வெளியிட்ட கருத்து..!

Sri Lankan Tamils LTTE Leader India
By Dharu May 26, 2023 02:03 PM GMT
Report

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகணங்களிலிருந்து யுத்த காலங்களில் இந்தியா சென்று மீண்டும் நாடு திரும்பியுள்ள மக்களின் தேவைகளை ஆராய வேண்டியது மற்றும் அவற்றை பூர்த்தி செய்ய வேண்டியது சிறிலங்கா அரசாங்கத்தின் கடமையென நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். 

இன்றைய தினம் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் சிறிலங்கா நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சினால் நடமாடும் சேவை நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

இதனடிப்படையில், குறித்த தரப்பினரின் தேவைகளை கருத்தில் கொண்டு அவற்றை பூர்த்தி செய்யும் நோக்கில் இன்றைய தினம் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் சிறிலங்கா நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சினால் நடமாடும் சேவை இடம்பெற்றது.

மீண்டும் நாடு திரும்பியுள்ள மக்கள்

அனைவருக்கும் இலங்கையர்கள் என்ற அடையாளம் - நீதி அமைச்சர் வெளியிட்ட கருத்து..! | Jaffna People Birthcertificate Identitycard Crisis

இந்த நிகழ்வில் உரையாற்றிய விஜயதாச ராஜபக்ச,

''இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகணங்களிலிருந்து யுத்த காலங்களில் இந்தியா சென்று மீண்டும் நாடு திரும்பியுள்ள மக்களின் தேவைகளை ஆராய வேண்டியது மற்றும் அவற்றை பூர்த்தி செய்ய வேண்டியது சிறிலங்கா அரசாங்கத்தின் கடமையாகும்.

இலங்கையர்கள் என்ற அடையாளம் அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும்.

இலங்கையின் யுத்த காலங்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகணங்களிலிருந்து பலர் இந்தியா சென்று மீண்டும் நாடு திரும்பியிருந்தனர். எனினும், இவ்வாறாக மீண்டும் இலங்கைக்கு திரும்பியவர்களிடம் பிறப்பு சான்றிதழ், அடையாள அட்டை உள்ளிட்ட பல அத்தியாவசிய சான்றிதழ்கள் இல்லாதிருந்தது.

மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு

அனைவருக்கும் இலங்கையர்கள் என்ற அடையாளம் - நீதி அமைச்சர் வெளியிட்ட கருத்து..! | Jaffna People Birthcertificate Identitycard Crisis

குறித்த தரப்பினர் இலங்கையர்கள் என்பதை நிறுபிப்பதற்கான சான்றுகள் எதுவுமில்லை. இவ்வாறாக இருப்போரின் தகவல்களை நாம் பிரதேச செயலகத்தினர் மற்றும் கிராம சேவகர்கள் ஊடாக பெற்றுக் கொண்டோம்.

இதன்படி, 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இவ்வாறாக இருப்பதாக நாம் தெரிந்து கொண்டோம். வடக்கில் இவ்வாறாக இருப்போருக்கு உதவும் முகமாக நடமாடும் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் இவ்வாறான நான்கு நடமாடும் சேவைகள் இதுவரை நடத்தப்பட்டுள்ளன. இதனடிப்படையில், அங்குள்ள 90 வீதமானோரின் பிரச்சனைகளுக்கு நாம் தீர்வு வழங்கியுள்ளோம்.

எவ்வாறாயினும், தற்போது திருகோணமலை மற்றும் மட்டக்களப்பில் இவ்வாறான பிரச்சனைகளுடன் இருப்போரை நாம் இணங்கண்டுள்ளோம்.

இந்த மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கான நடமாடும் சேவை 14 அமைச்சுக்கள் மற்றுமு் திணைக்களங்களின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஆதரவை பல அரச நிறுவனங்களின் அதிகாரிகள் எமக்கு வழங்கியுள்ளனர். இலங்கையின் அனைத்து மாகணங்களிலும் உள்ள மக்களின் உரிமைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டுமென்பது எமது நோக்கம்." என தெரிவித்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
நன்றி நவிலல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019