யாழில் இடம்பெற்ற திருட்டு சம்பவம்: இருவர் கைது
பெறுமதியான கையடக்க தொலைபேசியை திருடிய குற்றச்சாட்டில் ஒரு பெண்ணையும், அதனை வாங்கிய குற்றத்தில் இளைஞர் ஒருவரையும் யாழ்ப்பாண (Jaffna) காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாண காவல் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தனது கையடக்க தொலைபேசி திருடப்பட்டதாக நபர் ஒருவர் காவல்துறையினருக்கு அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில், திருடப்பட்ட கைத்தொலைபேசியோடு இளைஞரையும் குறித்த பெண்ணையும் கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகள்
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், தனக்கு அந்த தொலைபேசியை ஒரு பெண்ணே விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்ட இளைஞர் காவல்துறையினரிடம் கூறியுள்ளார். இதையடுத்து கைப்பேசியை திருடிய பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கைதான இருவரையும் காவல்துறையினர் காவல் நிலையத்தில் தடுத்துவைத்து விசாரித்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
![](https://cdn.ibcstack.com/bucket/63039cb22bd37.webp)
![அகதியாய் இருக்கும் துயரம் உலகில் எவருக்கும் வேண்டாம்…](https://cdn.ibcstack.com/article/8170aadf-e519-44c1-8849-b5aa88b7da2a/24-66736d16968e6-md.webp)
அகதியாய் இருக்கும் துயரம் உலகில் எவருக்கும் வேண்டாம்… 3 நாட்கள் முன்
![இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….](https://cdn.ibcstack.com/article/528b1858-c217-44bd-aa75-8d6f4258fc70/24-666c04ec6747a-sm.webp)
இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….
1 வாரம் முன்![கல்வி ஆயுதம் தான் தமிழினத்தை மீள் எழுச்சி கொள்ளச் செய்யும்…](https://cdn.ibcstack.com/article/be32300b-7292-4007-95f8-41795e7a8c3f/24-6662705be1451-sm.webp)