யாழில் மன விரக்தியில் குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு
யாழில் (Jaffna) மன விரக்தியில் தவறான முடிவெடுத்து நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
அளவெட்டி - விசவெட்டி பகுதியைச் சேர்ந்த அருட்பிரகாசம் மணிவண்ணன் (வயது 35) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (21) இடம்பெற்றுள்ளது.
தவறான முடிவு
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த நபர் மதுப்பாவனைக்கு அடிமையானவர் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில், கடந்த 18 ஆம் திகதி மைத்துனருக்கும் குறித்த நபருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் காரணமாக மைத்துனரால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார்.
மரண விசாரணை
இதையடுத்து, சிகிச்சையின் 20 ஆம் திகதி வீடு திரும்பி, வீட்டில் உள்ளவர்களுடன் முரண்பட்டுள்ளார்.
இதன்பின், நேற்று (21) காலை தவறான முடிவெடுத்து உயிரிழந்த நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
2 வாரங்கள் முன்