கச்சத்தீவு என்பது தமிழகத்தில் சூடு பறக்கும் பிரச்சார விவகாரம்: வித்தியாதரன் பகிரங்கம்
கச்சத்தீவு என்பது தமிழகத்தில் சூடு பறக்கும் பிரச்சார விவகாரம் எனவும் இந்த விடயத்தில் அனைத்து கட்சிகளும் ஒற்றை புள்ளியில் நிற்பது போல் காட்டிக்கொள்கின்றன என முத்த ஊடகவியலாளர் வித்தியாதரன் தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழின் சக்கரவீயூகம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் பலாலி விமானநிலையம் திறக்கப்பட வேண்டும், காங்கேசன்துறை முதல் தூத்துக்குடி வரையிலான சேவை நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
இந்த நெருக்கடி நேரத்திலாவது இலங்கை அரசு தன்னுடைய பௌத்த சிங்கள பேரினவாதத்தை கைவிட்டு தமிழருக்குரிய தேசம் தனியான ஒரு தேசமாக மேம்படுவது ஒட்டுமொத்த இலங்கைக்கும் நன்மை என்பதை புரிந்து கொள்வது சிறந்தது எனவும் தெரிவித்தார்.
வித்தியாதரன் கலந்து கொண்ட சக்கரவீயூகம் நிகழ்ச்சி