போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்ட கடுகண்ணாவ வீதி!
புதிய இணைப்பு
கொழும்பு- கண்டி பிரதான வீதி கடுகண்ணாவையில் வாகன போக்குவரத்துக்காக தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
மாவனெல்ல காவல்துறையினர் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.
இரண்டாம் இணைப்பு
வாகன போக்குவரத்திற்காக திறக்கப்பட்டிருந்த கொழும்பு - கண்டி பிரதான வீதியில் பயணிப்பதற்கு மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
பஹல கடுகண்ணாவ - கனேதன்ன பகுதியிலும், கடுகண்ணாவ நகரிலும் குறித்த வீதி மூடப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறாயினும் அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் வாகனங்கள் மாத்திரம் அனுமதிக்கப்படுவதாக குறிப்பிடப்படுகிறது.
முதலாம் இணைப்பு
கண்டி - கொழும்பு பிரதான வீதி மீண்டும் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டுள்ளது.

எனினும் அதற்கான நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விடயத்தை வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
நேரக் கட்டுப்பாடு
அதனடிப்படையில், கொழும்பு-கண்டி A01 வீதியானது காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மாத்திரமே போக்குவரத்துக்குத் திறந்திருக்கும்.

குறித்த வீதியில் நடைபெற்று வரும் அத்தியாவசிய மறுசீரமைப்புப் பணிகள் மற்றும் பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு இந்த நேரக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் மற்றும் சாரதிகள் இந்த நேரக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றி ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |