யாழில் நடுவீதியில் படுகொலை செய்யப்பட்ட இளைஞர்: நீதிமன்றின் அதிரடி உத்தரவு
யாழ்ப்பாணம் - திருநெல்வேலியில் இளைஞரொருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான ஆறு பேருக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், எதிர்வரும் டிசம்பர் 15 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் “ஆறு பேரும் கடந்த செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோது 24 மணி நேரம் காவல்துறை காவலில் தடுத்து வைத்து விசாரணை நடத்த காவல்துறையினர் அனுமதி கோரியிருந்தனர்.
தடுப்பு காவல்
காவல்துறையினரின் தடுப்பு காவல் விசாரணையின் போது கொலைச் சம்பவம் நடைபெற்ற நேரத்தில் தாக்குதலாளிகளை காப்பாற்றும் வகையில் சந்தேக நபர்களை பின் தொடர்ந்து பயணித்த காரொன்றும் யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினரால் ஏழாலை பகுதியில் வைத்து கைப்பற்றப்பட்டது.
தடுப்பு காவல் விசாரணை முடிவுற்ற நிலையில் ஆறு சந்தேக நபர்களும் மீண்டும் யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று (03) முற்படுத்தப்பட்ட போதே விளக்கமறியல் உத்தரவை மேலதிக நீதிவான் உசைன் பிறப்பித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை திருநெல்வேலி சந்தி அருகில் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக பிரதான சூத்திரதாரி உள்ளிட்ட ஆறு பேர் யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டனர்.
இதேவேளை குறித்த கொலைச் சம்பவத்துக்கு உடந்தையாக இருந்து தலைமறைவாகியுள்ள மேலும் இருவரை தேடி காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
[XOBCIPQ ]
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

