கனடாவில் 10 பேரை பலி கொண்ட கத்திக்குத்து..! இரண்டாவது கொலையாளியும் பலி
கத்திக்குத்து
கனடாவின் சஸ்காட் செவன் மாகாணத்தில் பொதுமக்கள் மீது சகோதரர்களான டேமியன் சாண்டர்சன், மைல்ஸ் சாண்டர்சன் கத்திக்குத்து நடத்தினர்.
இதில் 10 பேர் கொல்லப்பட்டதுடன் 18 பேர் காயம் அடைந்தனர். தப்பி ஓடிய இருவரையும் காவல்துறையினர் தேடி வந்த நிலையில் டேமியன் சாண்டர்சன், அப்பகுதியில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் அவரது உடலில் காயங்கள் இருந்துள்ளன.
தலைமறைவாக இருந்த மைல்ஸ் சாண்டர்சனை தேடி வந்த நிலையில் அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
காரை திருடி தப்பி சென்ற மைல்ஸ் சாண்டர்சன்
மைல்ஸ் சாண்டர்சன் சஸ்கட்செவனில் உள்ள நெடுஞ்சாலையில் ஒரு காரை திருடி தப்பி சென்ற போது காவல் துறையினர் விரட்டி சென்று பிடித்துள்ளனர்.
அவரது உடலில் ஏராளமான காயங்கள் இதையடுத்து அவரை வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி ரோண்டா பிளாக்மோர் கூறும்போது,
மைல்ஸ் சாண்டர்சன் கைது செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டிய நெருக்கடிக்கு ஆளானார். உடனே அவர் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தார்.
அவர் தனக்கு தானே சுயமாக காயங்களை ஏற்படுத்தி கொண்டுள்ளார். இதனால் அவர் உயிரிழந்தார் என்று தெரிவித்தார்.
