கணேமுல்ல சஞ்சீவ கொலை சூத்திரதாரிகள் ஒன்றாக சுற்றிய அதிர்ச்சி காணொளி
பாதாள உலகையே அதிர வைத்த கணேமுல்ல சஞ்சீவ கொலையில் வழக்கறிஞர் வேடமணிந்த துப்பாக்கிச் சூடு நடத்தியவரும், துப்பாக்கியை நீதிமன்றத்திற்கு கொண்டு வந்த சந்தேக நபரும் திவுலப்பிட்டி பகுதியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்குச் சென்று பொருட்களை வாங்குவது சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது.
கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, அதாவது 17 ஆம் திகதி பிற்பகல் 2.17 மணியளவில் அவர்கள் இருவரும் கடைக்குச் சென்று, சில சிறிய பொருட்களை வாங்கிய பிறகு, போத்தல்களில் பால் குடித்ததையும் அந்த காணொளியில் காண முடிகிறது.
காவல்துறைக்கு சிம்ம சொப்பனமான செவ்வந்தி
பாதாள உலகக் கும்பல் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக, தற்போது காணாமல் போன சந்தேக நபரான செவ்வந்தியின் தாய் மற்றும் இரண்டு காவல்துறை கான்ஸ்டபிள்கள் உட்பட 11 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சஞ்சீவ கொலை செய்யப்பட்டு சரியாக ஒன்பது நாட்கள் ஆகின்றன. நீர்கொழும்பு, கட்டு வெல்லேகம வீதி, எண் 243 இல் வசிக்கும் பின்புர தேவகே இஷாரா செவ்வந்தி வீரசிங்க என்ற 25 வயது பெண்ணை பாதுகாப்புப் படையினராலும் புலனாய்வு அமைப்புகளாலும் இதுவரை கைது செய்ய முடியவில்லை.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
