கொட்டாஞ்சேனை மாணவி மரணம்: காவல்துறையின் அறிவிப்பு
கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியில் உயிரை மாய்த்துக் கொண்ட பாடசாலை மாணவியின் வழக்கு தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக காவல்துறையினர் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
விசாரணையை மேற்கொண்டு வரும் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் கொழும்பு வடக்கு பிரிவின் பொறுப்பதிகாரி, இந்த சம்பவம் தொடர்பாக கண்டுபிடிக்கப்பட்ட சிசிரிவி காட்சிகள் மூலம் மேலதிக விசாரணைகள் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவு
சிசிரிவி காட்சிகள் மேலதிக விசாரணைக்காக மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், விசாரணை அறிக்கைகள் இன்னும் கிடைக்கவில்லை என்றும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
அத்தோடு, மேலும் பலரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பான மருத்துவ அறிக்கைகளையும் காவல்துறையினர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.
முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த நீதவான், இந்த விசாரணைகளின் முன்னேற்றத்தை செப்டம்பர் 29 திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் வேல்விமானம் திருவிழா
