உலகப் படைகளையே மிரளவைத்த விடுதலைப் புலிகளின் தரையிறக்கம்
தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாறு என்பது பல இழப்புகளாலும், அதே நேரத்தில் சொல்லில் வரிக்கமுடியாத சாதனைகளையும் நிரப்பியதாகவே இன்று நகர்ந்துகொண்டிருக்கிறது.
அந்த அடிப்படையில் இன்றைக்கு 23 ஆண்டுகளுக்கு முன் 26.03.2000 ஆம் ஆண்டு ஆனையிறவு படைத்தளத்தை கைப்பற்றுவதற்காக விடுதலைப்புலிகளால் முன்னெடுக்கப்பட்ட தரையிறக்க படை நடவடிக்கை இன்று வரை இது எவ்வாறு சாத்தியமானது என்ற கேள்வியை உலக இராணுவ ஆய்வாளர்களிடம் எழுப்பிக்கொண்டே இருக்கிறது.
ஒரு புகழ்பெற்ற மரபுப்போரியல் நகர்வாக உலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு விடுதலைப்புலிகளின் 1200 போராளிகள் தரையிறக்கப்பட்டு சிறிலங்காவின் 15000 இற்கும் அதிகமான சிறிலங்கா இராணுவத்தினரை நிர்மூலமாக்கி ஆனையிறவு படைத்தளத்தை கைப்பற்றிய வரலாற்று புகழ்மிக்க இந்த நடவடிக்கையானது, தமிழர் வரலாற்றில் பொன்எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட ஒரு சம்பவமாகும்.
எப்படி சாத்தியமானது?
இது எப்படி சாத்தியம் என உலகையே மிரள வைத்த குடாரப்பு தரையிறக்கம் இடம்பெற்று இன்று 23 ஆண்டுகள் கடக்கிறது.
ஆனாலும் ஈழத் தமிழர்களாக உலகின் ஒவ்வொரு மூலையிலும் பரவியிருக்கும் உலகத் தமிழர்கள் யாவரும் இன்றுவரை இந்த மிகப்பெரும் போரியல் நடவடிக்கையை கொண்டாடிக்கொண்டே இருக்கிறார்கள்.