தனது கட்சியின் எம்பிக்களை கூட தெரியாதென கைவிரிக்கும் அமைச்சர்
National People's Power - NPP
K.D. Lalkantha
By Sumithiran
தேசிய மக்கள் சக்தி கட்சியைப்(npp) பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்திற்கு வந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்களை தனக்குத் தெரியாது என்று அமைச்சர் லால் காந்த(lalkantha) தெரிவித்துள்ளார்.
இவர்கள் தனது கட்சியில் இருக்கிறார்களா அல்லது சஜித் பிரேமதாசவின் கட்சியில் இருக்கிறார்களா என்பதைத் தேர்ந்தெடுப்பது கூட கடினமாக இருந்த காலங்கள் இருந்தன என்று அவர் கூறினார்.
பெரும்பாலான எம்.பிக்கள் தேசிய மக்கள் சக்தியை சார்ந்தவர்கள்
யூடியூப் சனல் ஒன்றுடனான கலந்துரையாடலில் பங்கேற்றபோது லால்காந்த இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்த முறை நாடாளுமன்றத்தில் கலந்து கொண்ட தனது கட்சியின் 159 நாடாளுமன்ற உறுப்பினர்களில், பெரும்பான்மையானவர்கள் தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்துவதாக அவர் மேலும் கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி