6 மணி நேரத்திற்குள் வெளியேறவும்! முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு அதிரடி உத்தரவு
Sri Lanka Cabinet
Sri Lankan political crisis
Galle Face Riots
By Kanna
அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து 6 மணி நேரத்திற்குள் வெளியேறுமாறு முக்கிய முன்னாள் சிரேஷ்ட அமைச்சர் உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இதேவேளை, குறித்த அமைச்சரின் வீடு கடந்த 9 ஆம் திகதி தீக்கிரையாக்கப்பட்ட நிலையில், திடீரென வழங்கப்பட்ட இந்த உத்தரவு காரணமாக அமைச்சர் கடும் அதிர்ச்சிக்கும், வெறுப்புக்கும் உள்ளாகி இருப்பதாக தெரியவருகிறது.
எவ்வாறாயினும் உத்தரவுக்கு அமைய சிரேஷ்ட முன்னாள் அமைச்சர் 6 மணி நேரத்திற்குள் உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து மற்றுமொரு முக்கிய பிரமுகர் அந்த இல்லத்தில் குடியேற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி