வெள்ளவத்தையில் நடக்கும் கொள்ளைகள்: பின்னணியில் காவல்துறையினரா... மனோ சந்தேகம்

Police spokesman Sri Lanka Upcountry People Mano Ganeshan Sri Lanka
By Sathangani Dec 14, 2023 04:02 AM GMT
Report

இலங்கையில் இந்த வருடம் 111 துப்பாக்கி சூட்டு தாக்குதல்கள் இடம்பெற்றிருக்கிறது. 50 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. 59பேர் காயமடைந்துள்ளனர். காவல்துறையினர் அதனைக் கண்டு பிடிக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (13) நிலையியற் கட்டளை 27/2 கீழ் பாதுகாப்பு அமைச்சு சார் வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீடு தொடர்பில் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பிய போதே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் புகைத்தல், மதுசாரப் பாவனை : நாளாந்தம் 40 பேர் உயிரிழப்பு

இலங்கையில் புகைத்தல், மதுசாரப் பாவனை : நாளாந்தம் 40 பேர் உயிரிழப்பு

மலையக மக்களுக்கு காணி உரிமை 

”மலையக மக்களை ஒதுக்குவதை நிறுத்துவதாக அதிபர் பல தடவைகள் தெரிவித்திருக்கிறார். அது நல்ல விடயம் அதனை செய்யுங்கள். அதேநேரம் காணி உரிமையை வழங்குங்கள். மலையக மக்களுக்கு 10 பேர்ச் காணி உரிமையை வழங்குவதை ஆளும் கட்சி எதிர்க்கட்சி யாரும் எதிர்க்கப்போவதில்லை. தமிழ் மக்களைவிட சிங்கள மக்கள் அதற்கு ஆதரவாக இருக்கிறனர்.

வெள்ளவத்தையில் நடக்கும் கொள்ளைகள்: பின்னணியில் காவல்துறையினரா... மனோ சந்தேகம் | Let The Police Do Their Job Manoganeshan Said

எமது மக்களுக்கு பிரஜா உரிமை இருக்கின்றபோதும் அது பூரணமாக இல்லை. அதனை பூரணப்படுத்தி தோட்ட மக்களை தேசிய நீராேட்டத்தில் இணைத்துக்கொள்ள வேண்டும். அதிபர் சொன்னதை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

புதிய சட்டமூலங்களை சான்றுரைப்படுத்திய சபாநாயகர்

புதிய சட்டமூலங்களை சான்றுரைப்படுத்திய சபாநாயகர்


அத்துடன் தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை 1700ரூபாயாக அதிகரிக்க கம்பனி இணக்கம் இல்லை என தெரிவித்திருக்கிறது. ஆனால் அதிபர் தெரிவித்தது போல் சம்பள நிர்ணய சபை, கூட்டு ஒப்பந்தம் அல்லது வேறு எந்த வழியிலாவது அதனை செய்ய வேண்டும் என தெரிவிக்கிறோம்.

மேலும் கொழும்பில் குடிசன மதிப்பீட்டு புள்ளிவிபரவியல் திணைக்கள அதிகாரிகள் வீடு வீடாகச்சென்று தகவல் திரட்டி வருகின்றனர். எனது வீட்டுக்கும் வந்தார்கள். அவர்கள் சிவில் அதிகாரிகள். மூன்று மொழிகளிலும் ஆவணங்களை வழங்கி தகவல் திரட்டுகிறார்கள். அதில் எந்த பிரச்சினையும் இல்லை.

ஆனால் காவல்துறையினர் அந்த வேலையை செய்ய வேண்டாம் என்றே நாங்கள் தெரிவிக்கிறோம்.காவல்துறையினருக்கு இது தேவையற்ற வேலை. இந்த வருடம் நாட்டில் 111 துப்பாக்கி சூட்டு தாக்குதல் இடம்பெற்றிருக்கிறது. 50 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. 59பேர் காயமடைந்துள்ளனர். காவல்துறையினர் அதனைக் கண்டு பிடிக்க வேண்டும்.

மனித பாவனைக்கு உதவாத ஒரு தொகை பெரிய வெங்காயம் மீட்பு

மனித பாவனைக்கு உதவாத ஒரு தொகை பெரிய வெங்காயம் மீட்பு


 டிரான் அலஸ் நான் பொய் கூறுவதாக தெரிவித்தார்

அத்துடன் இன்று வெள்ளவத்தையில் பெண்களின் தங்க சங்கிலிகள் கொள்ளையடிக்கப்படுகின்றன. அதற்கு தேவையான தகவல்கள் காவல்துறையினருக்கு வழங்கப்படுகின்ற தகவல்கள் ஊடாகத்தான் செல்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது. அதனால் காவல்துறையினருக்கு காவல்துறையினரின் வேலையை செய்யவிடுங்கள் கிராம சேவகர்களுக்கு அவர்களின் வேலையை செய்ய விடுங்கள்.

வெள்ளவத்தையில் நடக்கும் கொள்ளைகள்: பின்னணியில் காவல்துறையினரா... மனோ சந்தேகம் | Let The Police Do Their Job Manoganeshan Said

கொழும்பில் தமிழ் மக்களின் வீடுகளில் காவல்துறையினர் பதிவு செய்வது தொடர்பில் தெரிவித்தபோது அமைச்சர் டிரான் அலஸ், நான் பொய் கூறுவதாக தெரிவித்தார். ஆனால் அவர் தெரிவித்தது அனைத்தும் பொய் என்றே நான் சொல்வது.

அதனால் சிறிலங்கா காவல்துறையினர் கொழும்பில் வீடு வீடாகச்சென்று வழங்கப்படும் சிங்கள மொழியில் மாத்திரமான விண்ணப்ப படிவத்தை நான் சபைக்கு சமர்ப்பிக்கிறேன் அரசியல் அமைப்பின் பிரகாரம் 3 மொழிகளிலும் வழங்கப்பட வேண்டும்.

ஆனால் டிரான் அலஸ் மற்றும் தேசபந்து தென்னகோனின் காவல்துறை தமிழில் மாத்திரமே கொழும்பில் விண்ணப்பம் வழங்கி வருகிறது. இதனை நிறுத்த வேண்டும்” என தெரிவித்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, யாழ்ப்பாணம்

07 Feb, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி, உதயநகர் கிழக்கு

03 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

05 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Paris, France

16 Jan, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Montreal, Canada

31 Jan, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், நீர்வேலி, Neuilly-sur-Marne, France

21 Jan, 2022
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Cergy, France

30 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரான்ஸ், France

06 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Basel, Switzerland, Reigoldswil, Switzerland

11 Feb, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, பேர்லின், Germany

19 Jan, 2018
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Montreal, Canada, Vancouver, Canada

31 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சிங்கப்பூர், Singapore, தண்ணீரூற்று, Toronto, Canada

30 Jan, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம்

05 Feb, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

4th ward,Puthukkudiyiruppu, Mullaitivu, London, United Kingdom

04 Feb, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கிளிநொச்சி, Eastham, United Kingdom, பேர்ண், Switzerland

20 Jan, 2022
மரண அறிவித்தல்

கொழும்பு, சரவணை, புங்குடுதீவு, Paris, France

31 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, Islington, United Kingdom

28 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, வெள்ளவத்தை

01 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

11 Feb, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில்

03 Feb, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் கிழக்கு, Basel, Switzerland

02 Feb, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Hayes, United Kingdom

30 Jan, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

02 Feb, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

27 Jan, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Lausanne, Switzerland

26 Jan, 2018