லண்டன் சிவன் ஆலயத்தில் அத்துமீறும் அறங்காவலர்?
By Independent Writer
இலண்டன் லூசியம் சிவன் கோவிலில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடுகளுக்கு எதிரான அறவழிப்போராட்டம் ஒன்று ஆலயத்தின் மீது கரிசனை கொண்ட ஆர்வலர்களால் ஆலயத்துக்கு அருகாமையில் நேற்று நடத்தப்பட்டுள்ளது.
ஆலய அறங்காவலர்கள் மீது விசனத்தை வெளியிட்ட ஆர்ப்பாட்டக்கார்கள் கோவில் பொதுச்சொத்தாக மாற்றப்படவேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்திருந்தனர்
இந்தப்போராட்டம் தொடர்பாக லூசியம் சிவன் கோவில் அறங்காவலர்கள் தமது விளக்கங்களை இதுவரை வழங்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.