சம்பந்தமில்லாத பதாகை விவகாரம்: ஊடகவியலாளர் மீது பொய் வழக்கு செய்து காவல்துறை அராஜகம்

Vavuniya Sri Lanka
By Dhilak Nov 28, 2023 10:19 AM GMT
Report

வவுனியாவில் விடுதலை புலிகளுக்கு சேறு பூசும் விதமாக காட்சிப்படுத்தப்பட்ட பதாகைகளை அகற்ற முற்பட்ட முன்னாள் போராளி பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், குறித்த சம்பவத்தை செய்தி சேகரித்துக் கொண்டிருந்த சுதந்திர ஊடகவியலாளர் கார்த்தீபன் மீதும் காவல்துறையினர் பொய் வழக்கினை தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா தலைமை காவல்நிலையத்திற்கு மிக அருகாமையில் தபால் நிலையத்திற்கு முன்பாக அரசுடன் இணைந்து செயற்ப்பட்ட சிலரது பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

மெய்யான தலைவர்கள் என்ற தலைப்பில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள குறித்த பதாதைகளில் விடுதலைப்புலிகளால் இவர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்ததாக வாசகங்களும் பொறிக்கப்பட்டிருந்தது.

யாழில் மின்சாரம் தாக்கி இளைஞன் பலி! (படங்கள்)

யாழில் மின்சாரம் தாக்கி இளைஞன் பலி! (படங்கள்)

 

வழக்கு தாக்கல்

குறித்த பதாதைகள் மக்கள் மத்தியில் குழப்ப நிலையினை ஏற்படுத்தும் என்ற காரணத்தினால் முன்னாள் போராளியும், போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் தலைவருமான செ.அரவிந்தன் நேற்றயதினம் (27.11) குறித்த பகுதிக்கு சென்று அங்கு நின்ற இருவரிடம் குறித்த பதாதைகளை அகற்றுமாறு தெரிவித்தார்.

சம்பந்தமில்லாத பதாகை விவகாரம்: ஊடகவியலாளர் மீது பொய் வழக்கு செய்து காவல்துறை அராஜகம் | Ltte Leaders Banner Issue Vavuniya Police

இதன்போது சம்பவ இடத்திற்கு வருகை தந்த வவுனியா காவல்துறையினர் அவரை, வலுக்கட்டாயமாக கைது செய்தனர். அவர் மீது ஆத்திரத்தை தூண்டி குழப்பத்தை ஏற்ப்படுத்த முயன்றார் என்ற குற்றச்சாட்டில் நீதிமன்றில் வழக்கும் தாக்கல் செய்திருந்தனர்.

வழக்கு விசாரணை

கைது செய்யப்பட்டவர் இன்றையதினம் (28.11) நீதிமன்றில் முற்ப்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு பிணை வழங்கி நீதிமன்றம் விடுவித்தது. இது தொடர்பான அடுத்த வழக்கு விசாரணை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 26 ஆம் இடம்பெறவுள்ளது.

சம்பந்தமில்லாத பதாகை விவகாரம்: ஊடகவியலாளர் மீது பொய் வழக்கு செய்து காவல்துறை அராஜகம் | Ltte Leaders Banner Issue Vavuniya Police

இதேவேளை, குறித்த சம்பவத்தினை செய்தி சேகரித்துக் கொண்டிருந்த சுதந்திர ஊடகவியலாளரும், வவுனியா ஊடக அமையத்தின் தலைவருமான பரமேஸ்வரன் கார்த்தீபன் மீதும் காவல்துறையினர் பக்கச்சார்பான முறையில் அதே வழக்கினை தாக்கல் செய்துள்ளனர்.

இதனால் அவரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கில் முன்னாள் போராளி சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் தலைமையில் பத்திற்கும் மேற்ப்பட்ட சட்டத்தரணிகள் முன்னிலையாகியருந்தமை குறிப்பிடத்தக்கது.

சஜித்தை சந்தித்த ரொஷான்! பதவி நீக்கத்திற்கு காரணம் கூறிய ரணில்

சஜித்தை சந்தித்த ரொஷான்! பதவி நீக்கத்திற்கு காரணம் கூறிய ரணில்


Gallery
ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026