லொகானின் உயிரிழப்பு: முதல் ஆளாக விரைந்த மகிந்த!
மரணமடைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சரான லொகான் ரத்வத்தேவுக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் லொகான் ரத்வத்தே இன்று காலமானார்.
ராஜபக்சர்களுக்கு நெருங்கிய அரசியல்வாதி
அவரது மரணம் தொடர்பில் கருத்து வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்த, “லொகான் ரத்வத்தேவின் மறைவு நாடுக்கும், குறிப்பாக கண்டி மாவட்டத்துக்கும் மிகப்பெரிய இழப்பாகும்” என்று தெரிவித்தார்.
அத்தோடு, அவர் தங்களுக்கு ஒரு நெருங்கிய அரசியல்வாதி என தெரிவித்த மகிந்த, லொகான் ஒரு நல்ல நண்பர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நாமல் ராஜபக்ச, “அவர் மகிந்த ராஜபக்சவுக்கு ஒரு சகோதரர் போன்று, எங்கள் குடும்பத்திற்கும் நெருங்கிய அரசியல்வாதியாக பணியாற்றினார்.
நாடுக்கும் கண்டி மாவட்டத்துக்கும் பல செயல்களை செய்து வைத்தவர். எங்கள் குடும்பத்தையும் அரசியல் கட்சியையும் சார்ந்து ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்,” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் தங்க மயில் தங்க அன்ன வாகன உற்சவம்
