மொட்டுவின் உறுப்பினரே அடுத்த அதிபர் வேட்பாளர்..!
ஜனநாயக ரீதியில் மீண்டும் நாங்கள் ஆட்சியை கைப்பற்றுவோம். பொதுஜன பெரமுனவின் உறுப்பினரையே அதிபர் வேட்பாளராக களமிறக்குவோம் என முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம்(01.05.2023) இடம்பெற்ற மே தின நிகழ்வுகளில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
2022 ஆம் ஆண்டு மே 09 சம்பவம் தொடர்பில் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச புத்தகம் வெளியிட்டுள்ளார்.
காலி முகத்திடல் போராட்டம்
அரசாங்கத்தை வீழ்த்த சர்வதேச மட்டத்தில் சூழ்ச்சிகள் காலி முகத்திடல் போராட்டக்களத்தில் மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிடுகிறார்.
தேசிய மட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட அரசியல் சூழ்ச்சிகளை அவர் மறந்து விட்டார்.
2022 ஆம் ஆண்டு ஜனவரி மாத காலப்பகுதியில் எரிபொருள், எரிவாயு, மின்விநியோக கட்டமைப்பில் திட்டமிட்ட வகையில் நெருக்கடிகள் ஏற்படுத்தப்பட்டன.
பொதுஜன பெரமுனவின் பிரதமர் மகிந்தவை பதவி விலகுமாறு அரசாங்கத்துக்குள் இருந்தவர்கள் தான் கடுமையான அழுத்தம் பிரயோகித்தார்கள்.
ஆட்சியை கைப்பற்றுவோம்
2015 ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேனவால் அதிபராக முடியுமாக இருந்தால் தமக்கும் அதிபராக முடியும் என்ற எண்ணத்தில் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இருந்து வெளியேறி உலங்கு வானூர்தியில் ஏறினார்கள்.
இன்று அந்த உலங்கு வானூர்தி வானத்தில் பறக்க முடியாத அளவுக்கு உள்ளது. பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை பலவீனப்படுத்த அரசாங்கத்துக்குள் எடுத்த சூழ்ச்சிகள் முழு நாட்டுக்குள் எதிர் விளைவுகளை ஏற்படுத்தியது.
பொதுஜன பெரமுனவின் பிரதமர் மகிந்த ராஜபக்சவை பதவி விலகுமாறு அரசாங்கத்துக்குள் இருந்தவர்கள் தான் கடுமையான அழுத்தம் பிரயோகித்தார்கள்
ஜனநாயக ரீதியில் மீண்டும் நாங்கள் ஆட்சியை கைப்பற்றுவோம். பொதுஜன பெரமுனவின் உறுப்பினரையே அதிபர் வேட்பாளராக களமிறக்குவோம் என குறிப்பிட்டுள்ளார்.
