ஓமந்தையில் பாரிய விபத்து : 3 மணிநேரம் தடைப்பட்ட போக்குவரத்து
வவுனியா - ஓமந்தை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து இன்று (27) அதிகாலை இடம்பெற்றிருந்தத நிலையில் ஏ9 வீதியின் போக்குவரத்தும் சுமார் 03 மணிநேரம் தடைப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் நீண்ட வரிசையில் வாகனங்கள் தரித்து நிற்பதை அவதானிக்க கூடியதாக இருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
மேலதிக விசாரணகள்
விபத்து குறித்த மேலும் தெரியவருவதாவது, வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி எருவுடன் பயணித்த பாரவூர்தி ஓமந்தை பகுதியிலே பழுதடைந்திருந்த நிலையில் தரித்து நின்றிருந்தது.

இந்நிலையில் குறித்த பாரவூர்தியினை பழுதுபார்க்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வரும் போது யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பிறிதொரு பாரவூர்தி குறித்த பாரவூர்தியின் பின் மோதியதில் இநத விபத்து இடம்பெற்றுள்ளது.
மேலும் இவ்விபத்தானது அதிக பனிமூட்டம் காரணமாக இடம்பெற்றிருக்கலாம் என காவல்துறையினரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
அத்துடன், விபத்து குறித்த மேலதிக விசாரணகளை ஓமந்தை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |