வெளிநாட்டு ஆசை காட்டி கோடிக்கணக்கில் மோசடி
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Crime Branch Criminal Investigation Department
Crime
By Thulsi
வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி, சுமார் 150 பேரிடமிருந்து 5 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன் நேற்று (24.06.2025) மாலை கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தெஹிவளை (Dehiwela) பிரதேசத்தில் வசிக்கும் 37 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
கிருலப்பனை காவல்துறை பிரிவில் பண மோசடி தொடர்பாக இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டு, நேற்று (24) மாலை, கொம்பனித்தெரு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
பின்னர், கொழும்பு மத்திய பிரிவு குற்ற விசாரணை பணியகத்தின் அதிகாரிகள் குழுவொன்று விசாரணை நடத்தி, இந்த சந்தேகநபரைக் கைது செய்தது.
இந்தச் சம்பவம் தொடர்பாக கொம்பனித்தெரு காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்