வௌ்ளவத்தையில் மாடியில் இருந்து விழுந்து குடும்பஸ்தர் பலி
வெள்ளவத்தை (Wellawatte) உள்ள 5 மாடி கட்டிடத்திலிருந்து விழுந்து குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (04.06.2025) காலை வெள்ளவத்தை - இராமகிருஷ்ண பகுதியில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவர் மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான இராசையா தவராசா என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
இவர் 3 வருடங்களுக்கு முன்பு வெள்ளவத்தை இராமகிருஷ்ணா பகுதியில் உள்ள ஒரு வர்த்தகரின் வீட்டிற்கு காவலாளியாக வேலைக்கு வந்துள்ளார்.
மேல் மாடியில் உள்ள நடைபாதைக்கு அருகில் இன்று (04) காலை மர கைப்பிடியால் செய்யப்பட்ட சாதனத்தைப் பயன்படுத்தி யன்னல் அடைப்புகளை சுத்தம் செய்யும் போது அவர் கீழே விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
